உறுதிக்கு பேர் போன எம்.பி.சுப்பிரமணியம்
சென்னை:
1952ம் ஆண்டு தனது அரசியல் வாழ்வைத் தொடங்கினார் எம்.பி.எஸ். என்று அரசியல் வட்டாரத்தில் அறியப்பட்ட எம்.பி.சுப்ரமணியம்.
பின்னர் 1957ல் நடந்த தேர்தலில் திமுக சார்பில் ஆத்தூர் தொகுதியிலேயே மீண்டும் போட்டியிட்டார். அந்தத் தேர்தலில் தமிழகம்முழுவதும் 15 திமுகவினரே வெற்றி பெற்றனர். அவர்களில் எம்.பி.எஸ்ஸும் ஒருவர்.
திமுகவில் இருந்தபோதும், மற்ற தலைவர்களை விட, ஈ.வி.கே.எஸ். சம்பத்திற்குத்தான் எம்.பி.எஸ். மிகவும் நெருக்கமானவராக இருந்துவந்தார். ஈ.வி.கே.எஸ். சம்பத், திமுகவிலிருந்து விலகியபோது அவருடன் சேர்ந்து பழ. நெடுமாறன், கண்ணதாசன் ஆகியோரும்திமுகவிலிருந்து விலகினர். அவர்களில் எம்.பி.எஸ்ஸும் ஒருவர்.
பின்னர் சம்பத், தமிழ் தேசியக் கட்சியைத் தொடங்கினார். ஆனால் இந்தக் கட்சி பின்னர் காங்கிரஸுடன் இணைந்தது.
காங்கிரஸ் கட்சியிலும் எம்.பி.எஸ். முக்கியமான தலைவராக விளங்கினார். 1980ம் ஆண்டு தமிழக காங்கிரஸ் தலைவராகநியமிக்கப்பட்டார். இந்த சமயத்தில்தான் புதிய பரபரப்பை அவர் ஏற்படுத்தினார். அதாவது, அப்போது நடந்த சட்டசபைத்தேர்தலின்போது,
திமுகவுக்கு இணையாக காங்கிரஸுக்கும் சீட் கொடுக்கப்படவேண்டும் என்று கட்சி மேலிடத்தை வலியுறுத்தி அதற்கான பட்டியலையும்கொடுத்து திமுகவுக்கு அதிர்ச்சியைக் கொடுத்தார் எம்.பி.எஸ்.
ஆனால் அப்போது நடந்த தேர்தலில் அதிமுக மாபெரும் வெற்றியைப் பெற்று ஆட்சியைப் பிடித்து சரித்திரம் படைத்தது. இதனால்எம்.பி.எஸ்.ஸின் "சம ஒதுக்கீடு பார்முலா" தோல்வி அடைந்தது.
1984ல் எம்.பி.எஸ். சட்டமேலவை உறுப்பினராக நியமிக்கப்பட்டார். அப்போது எதிர்க்கட்சித் தலைவராக செயல்பட்டார். 1989ம் ஆண்டுயாரும் எதிர்பாராத வகையில் அதிமுகவில் போய் சேர்ந்தார். பின்னர் மீண்டும் காங்கிரஸுக்குத் திரும்பினார்.
பேச்சிலும், எழுத்திலும் மிகவும் உறுதியாக இருப்பவர் என்று பாராட்டப்பட்டவர். மனதில் பட்டதை பட்டென்று சொல்லும் வழக்கம்உடையவர்.
சமீபத்தில் கூட மத்தியில் உள்ளது போல தமிழகத்திலும் கூட்டணி ஆட்சி வர வேண்டும், திமுக தலைமையிலான ஆட்சியில்காங்கிரஸுக்கும் பங்கு தர வேண்டும் என்ற மத்திய அமைச்சர் இளங்கோவனின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்திருந்தார் எம்.பி.எஸ் என்பதுகுறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications