விஜயேந்திரரின் ஜாமீன் நிபந்தனை தளர்வு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சங்கரராமன் கொலை வழக்கில் ஜாமீனில் விடுதலையாகியுள்ள விஜயேந்திரருக்கு, சென்னையில் தங்கியிருக்க வேண்டும் என்றுவிதிக்கப்பட்டிருந்த நிபந்தனை தளர்த்தப்பட்டுள்ளது.
இந்த நிபந்தனைகளைத் தளர்த்தக் கோரி விஜயேந்திரர் சார்பில் உயர் நீதிமன்றத்தில் மனு செய்யப்பட்டது. இந்த மனுவை பரிசீலித்த நீதிபதிதணிகாச்சலம், விஜயேந்திரருக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகளை ரத்து செய்து உத்தரவிட்டார்.
இதனால் இனி அவர் விரும்பிய இடத்தில் தங்க முடியும். அவரும் கலவைக்குச் சென்று ஜெயேந்திரருடன் தங்கவுள்ளதாகத் தெரிகிறது.அவருக்காக கலவை மடத்தில் ஏற்கனவே தனி அறை தயார் செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications