நெல்லை: பூமியில் இருந்து கிளம்பிய திடீர் நீருற்று
நெல்லை:
நெல்லை மாவட்டம் கடையத்தில் திடீரென பூமிக்கடியில் இருந்து நீரூற்று கிளம்பியது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தோனேஷிய பயங்கர நிலநடுக்கம், சுனாமியைத் தொடர்ந்து தமிழகத்தில் புவியியல்ரீதியில் நிறைய மாற்றங்கள் கண்கூடாக தெரியஆரம்பித்துள்ளன.
இந் நிலையில் நேற்று கடைத்தில் பூமிக்குள் இருந்து திடீர் நீருற்று தோன்றியது. சாலையோரத்தில் உருவான இந்த நீருற்றில் இருந்து 4 அடிஉயரத்துக்கு தண்ணீர் பீய்ச்சி அடித்தது.
பூமிக்கடியில் புதைக்கப்பட்ட குழாய் உடைந்து தண்ணீர் பீய்ச்சுவதாக முதலில் கருதப்பட்டது. பின்னர் அங்கு குழாய்களே இல்லாததுதெரியவந்தபோது பரபரப்பு தொற்றிக் கொண்டது.
இந் நிலையில் கயத்தாறு குளத்தில் கொதிக்கும் நீர்க் குமிழிகள் உருவானது தொடர்பாக ஆய்வு நடத்திய ஹைதராபாத் புவி இயற்பியல்மைய விஞ்ஞானிகள், பூமியின் அடித்தட்டில் இருந்து ஏற்பட்ட வாயுக் கசிவால் தான் வெந்நீர் குமிழிகள் தோன்றியதாக தெரிவித்துள்ளனர்.
இந்தோனேஷிய பயங்கர நிலநடுக்கத்தையடுத்து பூமியின் அடித்தட்டில் பெரிய அளவில் விரிசல்கள் ஏற்பட்டதால் தான் இது போன்றவாயுக் கசிவுகள் உண்டாவதாகவும் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications