மாநகராட்சி இடை தேர்தல்: அதிமுகவினரை ஈடுபடுத்த தடை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை மாநகராட்சி வார்டு இடை தேர்தலில் அதிமுகவினரை தேர்தல் பணியில் ஈடுபடுத்த சென்னை உயர்நீதிமன்றம்இடைக்காலத் தடை விதித்துள்ளது.
இந்த நிலையில் 131வது வார்டில் திமுக சார்பில் போட்டியிடும் ராமமூர்த்தி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றைத்தாக்கல் செய்தார். அதில், வார்டு இடை தேர்தலில் தேர்தல் அதிகாரிகளுக்கு உதவியாக, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தைச்சேர்ந்த அண்ணா தொழிற்சங்க உறுப்பினர்களை உதவியாளர்களாகப் பணியாற்ற மாநில தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.
அதிமுகவினரை தேர்தல் பணியில் ஈடுபடுத்தக் கூடாது. இதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
மனுவை விசாரித்த நீதிபதி ரவிராஜ பாண்டியன், அண்ணா தொழிற்சங்கத்தைச் சேர்ந்தவர்களை தேர்தல் பணியில் ஈடுபடுத்தக்கூடாது என்று இடைக்காலத் தடை விதித்து மாநிலத் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications