இடைத் தேர்தல்: சின்னம் பெற 20ம் தேதிக்குள் அணுக உத்தரவு!
Subscribe to Oneindia Tamil
சென்னை:
காஞ்சிபுரம், கும்மிடிப்பூண்டி இடைத் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் தங்களது சின்னங்களைப் பெற வருகிற 20ம்தேதிக்குள் தேர்தல் ஆணையத்தை அணுக வேண்டும் என்று மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா தெரிவித்துள்ளார்.
அதேபோல தற்போது அங்கீகாரம் இல்லாத, ஆனால் தேர்தல் அறிவிக்கப்பட்டதற்கு முன்பு 6 வருட காலத்தில் தேசியகட்சியாகவோ அல்லது மாநிலக் கட்சியாகவோ அங்கீகாரம் பெற்றிருந்தால், அந்தக் கட்சிகளும் சின்னம் கோரி 20ம் தேதிக்குள்அணுக வேண்டும் என்று கூறியுள்ளார் குப்தா.












Click it and Unblock the Notifications