வேட்டி கட்டாதது பெரிய பிரச்சினையா? அன்புமணி பாய்ச்சல்
சென்னை:
நாட்டில் எத்தனையோ பிரச்சினைகள் இருக்கும்போது, நான் வேட்டி கட்டாதது தான் பெரிய பிரச்சினையாகி விட்டதா என்றுமுதல்வர் ஜெயலலிதாவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் அன்புமணி.
சமீபத்தில் சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா பேசுகையில், அன்புமணி எப்போதும் கோட் சூட்டுடன் ஆங்கிலத்தில் பேசிக்கொண்டு திரிவதாக கடுமையாக குற்றம் சாட்டியிருந்தார்.
அதுபற்றிப் பேச வேண்டிய சட்டசபையில், தேவையே இல்லாத ஒரு விஷயம் குறித்து, நான் வேட்டி கட்டாதது குறித்துபேசியுள்ளார் முதல்வர். நான் வேட்டி கட்டினால் என்ன அல்லது வேறு உடை அணிந்தால் அவருக்கு என்ன?
இது பற்றியெல்லாமா சட்டசபையில் பேசுவார்கள்? வறுமை ஒழிப்பு, வேலையில்லாத் திண்டாட்டம் போன்ற முக்கியப்பிரச்சினைகளைப் பற்றி சட்டசபையில் பேசுவதை விட்டு வேட்டி கட்டினால்தான் தமிழன் என்று தேவையில்லாமல் விவாதம்நடத்தியிருக்கிறார்கள்.
வேட்டி கட்டியிருக்கிற அனைவருமே தமிழைப் பாதுகாக்கிறார்கள் என்றோ, கோட் சூட் போட்ட அனைவருமே தமிழைஅழிக்கிறார்கள் என்றோ கூற முடியாது.
பாமக தலைவர் ஜி.கே.மணி கேட்ட கேள்விக்கு முறையாக பதில் சொல்லமுடியாத ஆத்திரத்தில்தான் எனது உடை குறித்துவிமர்சனம் செய்துள்ளார் முதல்வர்.
தான்சானியா நாட்டுக்கு நான் சென்றபோது அங்கு நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில் நான் வேட்டி, சட்டை தான் போட்டுச்சென்றிருந்தேன். எனது கலாச்சார உடையில் நான் சென்றதை அங்குள்ள அனைவருமே பாராட்டினார்கள் என்றார் அன்புமணி.