For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திருவனந்தபுரம்-அபுதாபி: ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான சேவை

By Staff
Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்:

வருகிற 29ம் தேதி முதல் திருவனந்தபுரத்திலிருந்து அபுதாபிக்கு ஏர்-இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் அறிமுகப்படுத்தப்படஉள்ளதாக இதன் போக்குவரத்து நிர்வாக இயக்குனர் துளசி தாஸ் கூறினார்.

இது குறித்து திருவனந்தபுரத்தில் அவர் நிருபர்களிடம் கூறுகையில், ஏர்-இந்தியா எக்ஸ்பிரஸ் விமானப் போக்குவரத்து வருகிற29ம் தேதி முதல் தொடங்கப்படுகிறது. இந்த விமானத்தில் பயணிகளுக்கு எளிமையான சைவ உணவு வழங்கப்படும்.

இலவசமாக மது வழங்கப்படமாட்டாது.சர்வதேச விமானங்களில் உள்ள கட்டணத்தில் மூன்றில் ஒரு பங்கு கட்டணம் தான் இதில்வசூலிக்கப்படும். 180 பயணிகள் இந்த விமானத்தில் பயணம் செய்யலாம்.

முதலில் திருவனந்தபுரத்திலிருந்து அபுதாபிக்கு எக்ஸ்பிரஸ் விமானம் இயக்கப்படும். இதன் பிறகு டெல்லி, மும்பை, கொச்சி,கோழிக்கோடு ஆகிய நகரங்களுக்கும் இந்த சேவை விரிவுபடுத்தப்படும்.

மே 15ம் தேதி முதல் டொரன்டோவில் இருந்து அமிர்தசரஸ் வழியாக பார்டுங்காடுக்கு நேரடி விமானப் போக்குவரத்துதொடங்கப்படுகிறது. இது தவிர திருவனந்தபுரத்திலிருந்து அமெரிக்காவுக்கு நேரடி விமான சேவை தொடங்கவும்திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X