திருவனந்தபுரம்-அபுதாபி: ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான சேவை
திருவனந்தபுரம்:
வருகிற 29ம் தேதி முதல் திருவனந்தபுரத்திலிருந்து அபுதாபிக்கு ஏர்-இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் அறிமுகப்படுத்தப்படஉள்ளதாக இதன் போக்குவரத்து நிர்வாக இயக்குனர் துளசி தாஸ் கூறினார்.
இலவசமாக மது வழங்கப்படமாட்டாது.சர்வதேச விமானங்களில் உள்ள கட்டணத்தில் மூன்றில் ஒரு பங்கு கட்டணம் தான் இதில்வசூலிக்கப்படும். 180 பயணிகள் இந்த விமானத்தில் பயணம் செய்யலாம்.
முதலில் திருவனந்தபுரத்திலிருந்து அபுதாபிக்கு எக்ஸ்பிரஸ் விமானம் இயக்கப்படும். இதன் பிறகு டெல்லி, மும்பை, கொச்சி,கோழிக்கோடு ஆகிய நகரங்களுக்கும் இந்த சேவை விரிவுபடுத்தப்படும்.
மே 15ம் தேதி முதல் டொரன்டோவில் இருந்து அமிர்தசரஸ் வழியாக பார்டுங்காடுக்கு நேரடி விமானப் போக்குவரத்துதொடங்கப்படுகிறது. இது தவிர திருவனந்தபுரத்திலிருந்து அமெரிக்காவுக்கு நேரடி விமான சேவை தொடங்கவும்திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.