காஞ்சி, கும்மிடிப்பூண்டி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு
சென்னை:
காஞ்சிபுரம் தொகுதியில் மரணமடைந்த எம்.எல்.ஏ.திருநாவுக்கரசின் மனைவி மைதிலிக்கும், கும்மிடிப்பூண்டி தொகுதியில்கொலை செய்யப்பட்ட சுதர்சனம் எம்.எல்.ஏ.வின் மகன் விஜயகுமாருக்கும் அதிமுக சார்பில் போட்டியிட வாய்ப்புவழங்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம், கும்மிடிப்பூண்டி சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் மே 14ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் நேற்று தொடங்கியது. வேட்பு மனு தாக்கல் செய்ய 25ம் தேதி கடைசி நாளாகும்.
நேற்று காஞ்சிபுரம் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து மறைந்த எம்.எல்.ஏ.திருநாவுக்கரசின் மனைவி மைதிலி மனுதாக்கல் செய்திருந்தார். இதேபோல கும்மிடிப்பூண்டி தொகுதிக்கு கொலை செய்யப்பட்ட சுதர்சனம் எம்.எல்.ஏ.வின் மகன்விஜயகுமாரும் விண்ணப்பித்திருந்தனர்.
இதுவரை இரு தொகுதிகளுக்கும் சேர்த்து அதிமுக சார்பில் 83 பேர் விண்ணப்பித்திருந்தனர்.
இந்நிலையில் அதிமுக தலைமைக் கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் காஞ்சிபுரம் தொகுதிக்கு மறைந்தஎம்.எல்.ஏ.திருநாவுக்கரசின் மனைவி மைதிலியும், கும்மிடிப்பூண்டி தொகுதிக்கு கொல்லப்பட்ட எம்.எல்.ஏ.சுதர்சனத்தின் மகன்விஜயகுமாரும் போட்டியிடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications