For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கூவாகம்: இன்று அரவாணிகளுக்கு தாலி கட்டும் நிகழ்ச்சி!

By Staff
Google Oneindia Tamil News

விழுப்புரம்:

கூவாகம் கூத்தாண்டவர் கோவில் சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான அரவாணிகளுக்கு தாலி கட்டும்நிகழ்ச்சி இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு நடக்கிறது.

கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில் சித்திரைத் திருவிழா தொடங்கி நடந்து வருகிறது. இந்த விழாவையொட்டி இந்தியாமுழுவதிலிமிருந்து ஆயிரக்கணக்கான அரவாணிகள் கூவாகத்தில் குவிந்து வருகின்றனர்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான அரவாணிகளுக்கு தாலி கட்டும் வைபவம் இன்று இரவு நடக்கிறது. இன்று இரவு சுவாமி கண்திறத்தல் நிகழ்ச்சியுடன் இந்த வைபவம் தொடங்குகிறது.

மணப்பெண் போல அலங்கரித்து வரும் அரவாணிகளுக்கு கோவில் பூசாரி தாலி கட்டுவார்.

இரவு முழுவதும் அரவாணிகள் ஆடிப் பாடி கொண்டாட்டமாக இரவைக் கழிப்பார்கள்.

மறுநாள் காலை தேரோட்டம் நடைபெறும். அதன் பின்னர் அரவாண் களப்பலி எனப்படும் அரவாண் பலியிடப்படும் நிகழ்ச்சிநடைபெறும். அதன் பின்னர் அரவாணிகள் தாங்கள் கட்டிக் கொண்ட தாலியை அறுத்து வீசி, பொட்டழிக்கும் நிகழ்ச்சிநடைபெறும்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X