For Daily Alerts
Just In
கூவாகம்: இன்று அரவாணிகளுக்கு தாலி கட்டும் நிகழ்ச்சி!
விழுப்புரம்:
கூவாகம் கூத்தாண்டவர் கோவில் சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான அரவாணிகளுக்கு தாலி கட்டும்நிகழ்ச்சி இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு நடக்கிறது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான அரவாணிகளுக்கு தாலி கட்டும் வைபவம் இன்று இரவு நடக்கிறது. இன்று இரவு சுவாமி கண்திறத்தல் நிகழ்ச்சியுடன் இந்த வைபவம் தொடங்குகிறது.
மணப்பெண் போல அலங்கரித்து வரும் அரவாணிகளுக்கு கோவில் பூசாரி தாலி கட்டுவார்.
இரவு முழுவதும் அரவாணிகள் ஆடிப் பாடி கொண்டாட்டமாக இரவைக் கழிப்பார்கள்.
மறுநாள் காலை தேரோட்டம் நடைபெறும். அதன் பின்னர் அரவாண் களப்பலி எனப்படும் அரவாண் பலியிடப்படும் நிகழ்ச்சிநடைபெறும். அதன் பின்னர் அரவாணிகள் தாங்கள் கட்டிக் கொண்ட தாலியை அறுத்து வீசி, பொட்டழிக்கும் நிகழ்ச்சிநடைபெறும்.
Story first published: Tuesday, April 19, 2005, 5:30 [IST]