For Daily Alerts
Just In
திமுக வேட்பாளர்கள்: 2 நாட்கள் நேர்காணல்
சென்னை:
காஞ்சிபுரம், கும்மிடிப்பூண்டி இடைத் தேர்தலில் போட்டியிடும் திமுகவேட்பாளர்களை தேர்வு செய்ய வருகிற 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் அண்ணாஅறிவாலயத்தில் நேர்காணல் நடத்தப்படவுள்ளது.
இதைத் தொடர்ந்து திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள ஒருசெய்திக்குறிப்பில், காஞ்சிபுரம், கும்மிடிப்பூண்டி சட்டசபை இடைத் தேர்தலில்போட்டியிட விரும்பும் திமுகவினர் உரிய விண்ணப்பங்களை பூர்த்தி செய்து, 20மற்றும் 21 ஆகிய நாட்களில் தலைமைக் கழகத்தில் ஒப்படைக்க வேண்டும்.
விண்ணப்பித்தவர்களிடம் 22ம் தேதி காலை 10 மணி முதல் 2 நாட்களுக்குநேர்காணல் நடத்தப்படும். 23ம் தேதி வேட்பாளர் பெயர்கள் அறிவிக்கப்படும்.
விண்ணப்பிக்க விரும்புவோர் ரூ. 5000 கட்டியும், பெண்களாக இருந்தால் ரூ. 2500கட்டியும் விண்ணப்பங்களை கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
Comments
Story first published: Wednesday, April 20, 2005, 5:30 [IST]