ஜெயலட்சுமி : குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது

Subscribe to Oneindia Tamil

மதுரை:

ஜெயலட்சுமியின் சகோதரர் மற்றும் தாயார் கடத்தப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள 7 பேருக்கு மதுரை நீதிமன்றத்தில்இன்று குற்றப்பத்திரிக்கை நகல் வழங்கப்பட்டது.

ஜெயலட்சுமியின் தாயார் மற்றும் சகோதரர் ஆகியோர் கடத்தப்பட்டது தொடர்பாக சிவகாசி காவல் நிலையத்தில் ஜெயலட்சுமியின்தந்தை அழகர்சாமி புகார் கொடுத்தார். இந்தப் புகாரை விசாரிக்க சிபிஐக்கு மதுரை உயர்நீதிமன்றக் கிளை உத்தரவிட்டது.

இதைத் தொடர்ந்து விசாரணை நடத்திய சிபிஐ, உயர்நீதிமன்றக் கிளையில் அறிக்கை கொடுத்தது. அந்த அறிக்கையின்அடிப்படையில் மதுரை தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் 2 வாரங்களுக்கு முன்பு குற்றப்பத்திரிக்கை தாக்கல்செய்யப்பட்டது.

இதையடுத்து குற்றப்பத்திரிக்கை நகலைப் பெற்றுக் கொள்ள வருமாறு கூறி இன்ஸ்பெக்டர்கள் இளங்கோவன், வெள்ளையன்உள்ளிட்ட 7 பேருக்கும் மதுரை நீதிமன்றம் சம்மன் அனுப்பியது. அதன்படி இளங்கோவன், வெள்ளையன், சப் இன்ஸ்பெக்டர்ஷாஜகான், ஏட்டு கண்ணன் உள்ளிட்ட 7 பேரும் இன்று நீதிபதி அய்யாசாமி முன்னிலையில் ஆஜராகினர்.

அவர்களிடம் குற்றப்பத்திரிக்கை நகலை நீதிபதி வழங்கினார். இதைத் தொடர்ந்து வழக்கு விசாரணையை மே 11ம் தேதிக்குநீதிபதி ஒத்திவைத்தார்.

காவல்துறை அதிகாரிகள் தன்னை சீரழித்ததாக ஜெயலட்சுமி புகார் கூறிய வழக்கில் இன்னும் ஒரு வாரத்தில் சிபிஐகுற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+