For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜெயலட்சுமி: போலீஸார் குறித்து குற்றப்பத்திரிகையில் பரபரப்பு தகவல்கள்

By Staff
Google Oneindia Tamil News

மதுரை:

ரூ. 20 லட்சம் தராவிட்டால் கடத்தப்பட்ட ஜெயலட்சுமியின் தாயார், பேரக் குழந்தைகளை கொன்று விடுவதாக குற்றம்சாட்டப்பட்ட போலீஸார் மிரட்டியதாக சிபிஐ தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிக்கையில் பரபரப்பு தகவல்கள் இடம் பெற்றுள்ளன.

சிவகாசி ஜெயலட்சுமியின் தாயார் திருவேங்கடத்தம்மாள், சகோதரர், குழந்தைகள் ஆகியோரை போலீஸார் கடத்திச் சென்றதாகஜெயலட்சுமியின் தந்தை அழகர்சாமி கொடுத்த புகாரின் அடிப்படையில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி மதுரை தலைமைகுற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கில் இன்ஸ்பெக்டர்கள் இளங்கோவன், வெள்ளையன், சப் இன்ஸ்பெக்டர் ஷாஜகான், ஏட்டு கண்ணன், நகைப்பட்டறைஅதிபர் முருகவேல், அவரது உறவினர்கள் சண்முகம், ரவிசங்கர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இந்தக் குற்றப்பத்திரிக்கையின் நகல் குற்றம் சாட்டப்பட்ட 7 காவல்துறையினரிடம் மதுரை நீதிமன்றத்தில் நேற்றுவழங்கப்பட்டது. குற்றப்பத்திரிக்கையில் பரபரப்பான பல தகவல்கள் அடங்கியுள்ளன. குற்றப்பத்திரிக்கையில் இடம் பெற்றுள்ளதகவல்கள் குறித்த விவரம்:

டிஎஸ்பி ராஜசேகர், இன்ஸ்பெக்டர்கள் இளங்கோவன், மலைச்சாமி, சப் இன்ஸ்பெக்டர் ஷாஜகான் ஆகியோர், ஜெயலட்சுமியுடன்பணத் தொடர்பு வைத்திருந்தனர். இதில் இளங்கோவன், நிறைய பணத்தை ஜெயலட்சுமியிடம் கொடுத்து வைத்திருந்தார்.

ஆனால் இந்தப் பணத்தை திருப்பிக் கொடுக்காமல் ஜெயலட்சுமி இழுத்தடித்துள்ளார். இளங்கோவனும் பணத்தைத் திருப்பித்தருமாறு கேட்டு வந்துள்ளார்.

இளங்கோவன் அடிக்கடி பணம் கேட்டதால் அப்போது மதுரை மாநகர காவல்துறை ஆணையராக இருந்த ராதாகிருஷ்ணனைஅணுகி புகார் செய்துள்ளார் ஜெயலட்சுமி. பணத்தைத் திருப்பித் தர கால அவகாசம் கொடுக்குமாறும் கோரியுள்ளார்.

மேலும் இளங்கோவனின் உறவினர் அய்யாசாமி என்பவரின் மூலம் கடந்த 2004ம் ஆண்டு ஜூன் மாதம் 28ம் தேதி ரூ. 5.8 லட்சம்பணத்தைத் திருப்பித் தருவதாக கூறியுள்ளார்.

இதேபோல, ஷாஜகானின் ரூ. 1லட்சம் பணத்தையும் ஜெயலட்சுமி திருப்பித் தரவில்லை.

இதுதொடர்பாக ஜெயலட்சுமியிடம் கேட்பதற்காக கடந்த ஆண்டு ஜூன் மாதம் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் ஏட்டு கண்ணன்,முருகவேல், அவரது தந்தை அண்ணாமலை ஆகியோர் உடுமலைப்பேட்டையில் உள்ள சேதுராஜ் வீட்டுக்குச் சென்றுள்ளனர்.

அப்போது பணத்தைத் திருப்பித் தருவதாக கூறிய ஜெயலட்சமி, அவர்களை கோவைக்கு கூட்டிச் சென்றுள்ளார். பின்னர் அன்றுஇரவு, ஏட்டு கண்ணன், முருகவேல் ஆகியோர் சேதுராஜ் வேலை பார்த்த ஹோட்டலுக்குச் சென்று அவரை கூட்டிக்கொண்டுஉடுமலைப் பேட்டையில் உள்ள வீட்டுக்குச் சென்றனர்.

அங்கு மதுரை எல்லீஸ் நகரில் உள்ள ஜெயலட்சுமியின் வீட்டுச் சாவியை, ஜெயலட்சுமியின் அனுமதி பெறாமலேயே அவர்கள்எடுத்துக் கொண்டனர். பின்னர் சேதுராஜின் மகன் பாபுவை அழைத்துக் கொண்டு கோவை உக்கடத்தில் உள்ள அண்ணாலையின்வீடடுக்கு வந்தனர்.

திருச்சியில் உள்ளவர்களிடம் பணத்தை வாங்கித் தருவதாக ஜெயலட்சுமி கூறியிருந்ததால், பாபுவை அண்ணாமலை வீட்டில்விட்டு விட்டு கண்ணன், முருகவேல், அண்ணாமலை ஆகியோர் ஜெயலட்சுமியுடன் திருச்சி சென்றனர்.

ஆனால் திருச்சியில் அவர்களை ஏமாற்றி விட்டு ஜெயலட்சுமி தப்பி விட்டார். இதனால் கண்ணன், முருகவேல், ரவிசங்கர்,சண்முகம், ஷாஜகான், இளங்கோவன் ஆகியோர் கோபமடைந்தனர்.

ஜெயலட்சுமியிடம் கொடுத்த பணத்தை திரும்பப் பெற அவரது குடும்பத்தினரைக் கடத்துவதுதான் ஒரே வழி என்ற முடிவுக்குஅவர்கள் வந்தனர். இதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு ஜூன் மாதம் 27ம் தேதி அதிகாலை டாடா சுமோ காரில், கண்ணன்,முருகவேல், ரவிசங்கர், சண்முகம் ஆகியோர் மதுரையில் இருந்து கோவையில் உள்ள ஜெயலட்சுமியின் சகோதரர் சீனிவாசன்வீட்டுக்குச் சென்றனர்.

திடீர் நகர் போலீஸார் என்று கூறி தங்களை அவர்கள் அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளனர். சீனிவாசனிடம் விசாரணை நடத்தவந்திருப்பதாக அவரிடம் கூறியுள்ளனர். ஜெயலட்சுமி மீது வாரண்ட் உள்ளதாகவும், அவரை அடையாளம் காட்டுமாறும்அவர்கள் கூறியுள்ளனர். ஆனால் அவர் மறுக்கவே, அவரை காரில் ஏற்றிக் கொண்டு சேதுராஜ் வேலை பார்க்கும் பொள்ளாச்சிஹோட்டலுக்கு சென்றனர்.

பின்னர் சேதுராஜை கூப்பிட்டுக் கொண்டு ஜெயலட்சமியின் நண்பர் ஜோர்சன் என்பவரின் ஊரான வேதம்பட்டிக்கு சென்றனர்.அங்கு ஜோர்சன் இல்லை. எனவே அவரது தாயார் குணசீலியிடம் விசாரித்துள்ளனர்.

பின்னர் சேதுராஜின் வீட்டுக்கு வந்தனர். அங்கிருந்த சில தஸ்தாவேஜுகளை எடுத்துக் கொண்டு வீட்டில் இருந்தவர்களையும்மிரட்டி விட்டு மதுரைக்குத் திரும்பினர். வழியில் ஷாஜகானும் அவர்களுடன் சேர்ந்து கொண்டார்.

குடும்பத்தினர் கடத்தல்:

பின்னர் சிவகாசி அருகே உள்ள காக்கிவாடன் பட்டியில் உள்ள ஜெயலட்சுமியின் தந்தை அழகர்சாமி வீட்டுக்கு சென்றனர். ஆனால்வீடு பூட்டப்பட்டிருந்தது. பின்னர் வீட்டு உரிமையாளரிடம் கதவைத் திறக்குமாறு கூறி உள்ளே சென்றனர்.

பின்னர் ஜெயலட்சுமியின் தாயார் திருவேங்கடத்தம்மாள், ஜெயலட்சுமியின் மகள் அபிநயா, மகன் கோகுல் ஆகியோரை காரில்ஏற்றிக் கொண்டு திருப்பினர்.

இளங்கோவன் தூண்டுதலின் பேரிலும், கண்ணன் மற்றும் பிற குற்றவாளிகளின் தொடர்பிலேயே இந்த கடத்தல் நடந்துள்ளது.மதுரைக்கு கடத்தி வந்த பின்னர் அவர்களை எல்லீஸ் நகரில் உள்ள ஜெயலட்சுமியின் வீட்டில் சட்டவிரோதமாக அடைத்துவைத்திருந்தனர்.

கடத்தப்பட்டவர்களை விடுவிக்க வேண்டும் என்றால் ரூ. 20 லட்சம் தர வேண்டும் என்றும் அவர்கள் அழகர்சாமியிடம்தெரிவித்துள்ளனர். இந்த நேரத்தில் ரவிசங்கர், திருவேங்கடத்தம்மாளை அடித்து சித்திரவதை செய்துள்ளார்.

இதுகுறித்து காவல்துறை அதிகாரிகளுக்கு தந்தி மூலம் தெரிவித்துள்ளார் அழகர்சாமி. திருத்தங்கல் இன்ஸ்பெக்டர்வெள்ளையனிடம் ஜூன் 29ம் தேதி எழுத்துப்பூர்வமாக புகாரும் கொடுத்துள்ளார். ஆனால் இன்ஸ்பெக்டர் இளங்கோவனைக்காப்பாற்ற வேண்டும் என்பதற்காக, வழக்கை சரியாக நடத்தவில்லை வெள்ளையன்.

ஜூன் 30ம் தேதி எல்லீஸ் நகர் வந்த வெள்ளையன், அங்கு அடைத்து வைக்கப்பட்டிருந்த திருவேங்கடத்தம்மாள, குழந்தைகள்,சகோதரர் ஆகியோரிடம், தாங்கள் கடத்தப்படவில்லை என்றும் ஜெயலட்சுமியைப் பார்ப்பதற்காக வந்ததாகவும் எழுதித் தருமாறுவற்புறுத்தினார்.

பின்னர் ஜூலை 7ம் ததி சிவகாசி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் அவர்களை வெள்ளையன் ஆஜர்படுத்தினார். அப்போதுதங்களை கடத்தியதாக மாஜிஸ்திரேட்டிடம் திருவேங்கடத்தம்மாள் உள்ளிட்டோர் தெரிவித்தனர்.

அதன் பின்னர்தான் ஜெயலட்சுமியைக் காணவில்லை என்று கூறி அழகர்சாமி ஹேபியஸ் கார்பஸ் மனுவைத் தொடர்ந்தார் என்றுகுற்றப்பத்திரிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கில், 63 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. 96 பக்க வாக்குமூலங்கள் இடம் பெற்றுள்ளன. 65ஆவணங்களும் சேர்க்கப்பட்டுள்ளன. கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட டாடா சுமோ கார், இளங்கோவன்வீட்டில்கைப்பற்றப்பட்ட 63 போட்டோக்களுடன் கூடிய ஜெயலட்சுமியின் திரைப்பட ஆல்பம் ஆகியவையும் கோர்ட்டில்ஒப்படைக்கப்பட்டுள்ளன.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X