வேட்பாளர் சாவு: வி.சிறுத்தைகள் 25ல் ஆர்ப்பாட்டம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பாப்பாபட்டி பஞ்சாயத்துத் தலைவர் தேர்தலில் போட்டியிட்ட விடுதலைச் சிறுத்தைகள் வேட்பாளர் நரசிங்கம் மர்மமானமுறையில் இறந்தது குறித்து சிபிஐ விசாரணை நடத்தக் கோரி வருகிற 25ம் தேதி தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக விடுதலைச் சிறுத்தைகள் பொதுச் செயலாளர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.
இந்த மர்மசாவு குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும். இக்கோரிக்கையை வலியுறுத்தி வருகிற 25ம் தேதி மாநிலம் தழுவியஅளவில், மாவட்டத் தலைநகரங்கள் தோறும் விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
சென்னை மாநகராட்சித் தேர்தலின் போது நடந்த வன்முறைச் சம்பவங்களைப் பார்க்கும்போது, ஜனநாயகத்தின் மீதானநம்பிக்கையை குலைக்கும் விதமாக உள்ளது.
காஞ்சிபுரம், கும்மிடிப்பூண்டி இடைத் தேர்தல் பாதுகாப்புப் பணிக்கு துணை ராணுவத்தை ஈடுபடுத்த வேண்டும் என்றார்திருமாவளவன்.












Click it and Unblock the Notifications