லாலு மீது தாக்குதல்: கேபினட் கமிட்டி கண்டனம்
டெல்லி:
குஜராத் சென்ற லாலு மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு நேற்றிரவு நடந்த கேபினட் கமிட்டி கூட்டத்தில் கண்டனம்தெரிவிக்கப்பட்டது.
குஜராத் மாநிலம் வதோரா மாவட்டத்திலிலுள்ள சால்மியா என்ற இடத்தில் நேற்று அதிகாலை நடந்த ரயில் விபத்தில் 20 பேர்பலியானார்கள். 80க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்தனர்.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து மத்திய அரசியல் விவகாரங்களுக்கான கேபினட்கமிட்டியின் அவசரக் கூட்டம் நேற்றிரவு நடந்தது. பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் உள்துறைஅமைச்சர் சிவராஜ் பாட்டீல்,
ராணுவ அமைச்சர் பிரணாப் முகர்ஜி, ரயில்வே அமைச்சர் லாலு பிரஸாத் யாதவ், சட்ட அமைச்சர் பரத்வாஜ், மனித வளமேம்பாட்டுத் துறை அமைச்சர் அர்ஜூன் சிங் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் குஜராத்தில் லாலு மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு பிரதமர் தனது அதிர்ச்சியை தெரிவித்தார். லாலு மீதுநடத்தப்பட்ட தாக்குதல் கோழைத்தனமானது என்று கூட்டத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
அமைச்சர் லாலுவுக்கு போதிய பாதுகாப்பு அளிக்கத் தவறிய மாநில அரசு அதிகாரிகளுக்கும் கூட்டத்தில் கண்டனம்தெரிவிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications