லாலு மீது தாக்குதல்: கேபினட் கமிட்டி கண்டனம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

குஜராத் சென்ற லாலு மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு நேற்றிரவு நடந்த கேபினட் கமிட்டி கூட்டத்தில் கண்டனம்தெரிவிக்கப்பட்டது.

குஜராத் மாநிலம் வதோரா மாவட்டத்திலிலுள்ள சால்மியா என்ற இடத்தில் நேற்று அதிகாலை நடந்த ரயில் விபத்தில் 20 பேர்பலியானார்கள். 80க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்தனர்.

விபத்து குறித்து அறிந்ததும் ரயில்வே அமைச்சர் லாலு சம்பவ இடத்திற்கு விரைந்தார். பிறகு அவர் காயமடைந்தவர்களைபார்ப்பதற்காக வதோரா மருத்துவமனைக்கு சென்றார். வழியில் அவரது கார் மீது கல் வீசப்பட்டது. அவரது காருக்கு தீவைக்கவும்ஒரு கும்பல் முயன்றது.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து மத்திய அரசியல் விவகாரங்களுக்கான கேபினட்கமிட்டியின் அவசரக் கூட்டம் நேற்றிரவு நடந்தது. பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் உள்துறைஅமைச்சர் சிவராஜ் பாட்டீல்,

ராணுவ அமைச்சர் பிரணாப் முகர்ஜி, ரயில்வே அமைச்சர் லாலு பிரஸாத் யாதவ், சட்ட அமைச்சர் பரத்வாஜ், மனித வளமேம்பாட்டுத் துறை அமைச்சர் அர்ஜூன் சிங் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் குஜராத்தில் லாலு மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு பிரதமர் தனது அதிர்ச்சியை தெரிவித்தார். லாலு மீதுநடத்தப்பட்ட தாக்குதல் கோழைத்தனமானது என்று கூட்டத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

அமைச்சர் லாலுவுக்கு போதிய பாதுகாப்பு அளிக்கத் தவறிய மாநில அரசு அதிகாரிகளுக்கும் கூட்டத்தில் கண்டனம்தெரிவிக்கப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+