2 ரூபாய்க்கு கொலை; தொழிலாளிக்கு ஆயுள் - 24 நாட்களில் தீர்ப்பு!

Subscribe to Oneindia Tamil

சென்னை:

2 ரூபாய் தர மறுத்ததால் தனது நண்பரை மது பாட்டிலால் குத்திக் கொன்ற தொழிலாளிக்கு சென்னை 3வது விரைவு நீதிமன்றம்ஆயுள் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது. 24 நாட்களில் இந்த வழக்கை விசாரித்து சென்னை விரைவு நீதிமன்றம்தீர்ப்பளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சென்னை புதுப்பேட்டை எல்.ஜி. சாலை பகுதியைச் சேர்ந்தவர் மூர்த்தி. இவரும், வேலூர் மாவட்டம் ஆம்பூரைச் சேர்ந்த சத்யசீலன்என்பவரும் சேர்ந்து பேப்பர் பொறுக்கும் வேலையில் ஈடுபட்டு வந்தனர்.

கடந்த மார்ச் மாதம் 28ம் தேதி இருவரும் மது அருந்தினர். அப்போது 2 ரூபாய் தருமாறு சத்தியசீலனிடம், மூர்த்தி கேட்டுள்ளார்.ஆனால் தன்னிடம் ரூபாய் இல்லை என்று சத்தியசீலன் கூறியுள்ளார். இதுதொடர்பாக இருவருக்கும் வாய்த் தகராறு ஏற்பட்டுகைகலப்பில் முடிந்தது.

இதில் ஆத்திரமடைந்த மூர்த்தி, கையில் இருந்த மது பாட்டிலை உடைத்து சத்தியசீலனைக் குத்தினார். கழுத்தில் படுகாயமடைந்தசத்தியசீலன் சென்னை அரசு பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அடுத்த நாள்இறந்தார்.

கைது செய்யப்பட்ட மூர்த்தி மீது சென்னை 3வது விரைவு நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. விசாரணையை 24 நாட்களில்முடித்த நீதிபதி பழனிச்சாமி, மூர்த்தி மீதான குற்றச்சாட்டு நிரூபணமாகியுள்ளதால் அவருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ. 1000அபராதம் விதிப்பதாக தீர்ப்பளித்தார்.

சென்னை விரைவு நீதிமன்றம் ஒன்றில் இவ்வளவு துரிதமாக தீர்ப்பு கூறப்பட்டுள்ளது இதுவே முதல் முறை. மேலும், தமிழகத்தில்மேலும் சில விரைவு நீதிமன்றங்களிலும் இதுபோல துரிதமாக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+