For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

62 நிமிடங்களில் 1330 குறள்கள் ..!

By Staff
Google Oneindia Tamil News

கோவை:

திருப்பூரைச் சேர்ந்த தொழிலாளி ஒருவர் 62 நிமிடங்களில் 1330 குறள்களையும் பிழையின்றி ஒப்புவித்து அனைவரையும்ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறார்.

"துப்பார்க்குத் துப்பாய .. என்று தொடங்கும் குறளை சரியாக ஒப்புவிப்பதற்குள் நம்மில் பலர் தடுமாறிப் போய் விடுவோம்.நிலைமை இப்படி இருக்கையில், திருக்குறளில் உள்ள 1330 குறள்களையும் தடுமாறாமல், பிழையின்றி 62 நிமிடங்களில் கூறிஅசத்துகிறார் திருப்பூரைச் சேர்ந்த தொழிலாளர் ரங்கராஜ்.

அந்தக் கால பி.யூ.சி படித்துள்ள ரங்கராஜ், திருப்பூரில் உள்ள ஒரு ஜவுளி நிறுவனத்தில் தொழிலாளராக உள்ளார். ஜவுளிநிறுவனத்தில் வேலை பார்த்தாலும் படிப்பதில் ஆர்வம் மிக்கவர் ரங்கராஜ். அதிலும் திருக்குறள் என்றால் இவருக்கு உயிர்.

திருக்குறளில் உள்ள கருத்துக்கள் வெகுவாக இவரைக் கவர்ந்ததால், அத்தனை குறள்களையும் மனப்பாடமாக படிக்கஆரம்பித்தார். இப்போது அத்தனை குறள்களும் இவருக்கு அத்துப்படி.

அத்துடன் நிற்காமல் தனது மகன்கள் விவேக்ராஜ் (12வது படிக்கிறார்), கோகுல்ராஜ் (8வது படிக்கிறார்) ஆகியோருக்கும்திருக்குறளை கற்றுக் கொடுத்துள்ளார். அவர்களும் இப்போது 350 குறள்கள் வரை கூறுகிறார்கள்.

அத்தனை குறள்களையும் அப்படியே கடகடவென கூறி அசத்துகிறார் ரங்கராஜ். அத்துடன், ஏதாவது ஒரு குறளைக் கூறி அதுஎத்தனையாவது குறள், எந்த அத்தியாயத்தின் கீழ் வருகிறது என்பதையும் சரியாக கூறுகிறார்.

இப்போது ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட குறள்களையும் மனப்பாடம் செய்யத் தொடங்கியுள்ளார். அறத்துப்பாலில் வரும்380 குறள்களையும் மனப்பாடம் செய்து முடித்துள்ளாராம். மற்ற குறள்களையும் விரைவில் மனப்பாடம் செய்து விடுவேன் என்றுகூறுகிறார் சாதனை மனிதர் ரங்கராஜ்.

ரங்கராஜின் குறள் ஆர்வத்தைப் பார்த்து வியந்த ஈரோடு தமிழ்ச் சங்கம், அவருக்கு "நற்குறள் நாயகன்" என்ற விருது அளித்துப்பாராட்டியுள்ளதாம்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X