இடைத் தேர்தல்: ஜெ. ஒரு வாரம் தீவிர பிரசாரம்
சென்னை:
காஞ்சிபுரம் மற்றும் கும்மிடிப்பூண்டி தொகுதிகளில் மே 3ம் தேதி முதல் 10ம் தேதி வரை ஒரு வாரத்திற்கு முதல்வர் ஜெயலலிதாதீவிரத் தேர்தல் பிரசாரம் செய்யவுள்ளார்.
காஞ்சிபுரம், கும்மிடிப்பூண்டி இடைத் தேர்தல் மே 14ம் தேதி நடைபெறுகிறது. இதில் காஞ்சிபுரம் தொகுதியில் அதிமுக சார்பில்மைதிலி திருநாவுக்கரசும், கும்மிடிப்பூண்டியில் விஜயக்குமாரும் போட்டியிடுகிறார்கள்.
இதுதொடர்பாக அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மே 3ம் தேதி காஞ்சிபுரம் தொகுதிக்குட்பட்டவெள்ளைகேட் தொடங்கி தேரடி வரை ஜெயலலிதா பிரசாரம் செய்கிறார்.
மே 4ம் தேதி கன்னிகாபுரம் தொடங்கி கன்னடியன் குடிசை பகுதி வரையிலும் முதல்வர் பிரசாரம் மேற்கொள்கிறார்.
5ம் தேதி கும்மிடிப்பூண்டி தொகுதிக்குட்பட்ட தானாகுளம் தொடங்கி ஊத்துக்கோட்டை வரையிலும், 7ம் தேதி வானியன் சத்திரம்தொடங்கி கொசவன் பேட்டை வரையிலும் பிரசாரம் மேற்கொள்கிறார் ஜெயலலிதா.
9ம் தேதி காஞ்சிபுரம் தொகுதிக்குட்பட்ட டோல்கேட் முதல் ஐயங்கார்குளம் வரையிலும், 10ம் தேதி கும்மிடிப்பூண்டிக்கு உட்பட்டபுதுவாயல் தொடங்கி கும்மிடிப்பூண்டி வரையிலும் ஜெயலலிதா பிரசாரம் மேற்கொள்கிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.