கீரிப்பட்டி: ஊராட்சித் தலைவர் "வழக்கம் போல" ராஜினாமா!

Subscribe to Oneindia Tamil

மதுரை:

கீரிப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவராக இன்று பதவியேற்ற அழகுமலை, அடுத்த நிமிடமே தனது பதவியை ராஜினாமா செய்தார்.

தலித் பஞ்சாயத்துக்களான மதுரை மாவட்டம் பாப்பாபட்டி, கீரிப்பட்டி, நாட்டாமங்கலம் ஆகியவற்றிற்கு நீண்ட காலமாக தேர்தல்நடத்த முடியாமல் உள்ளது. அப்படியே தேர்தல் நடந்தாலும் பதவியேற்ற உடனேயே அவர்கள் ராஜினாமா செய்து விடும் நிலைநீடித்து வருகிறது.

இந்த நிலையில் கடந்த 19ம் தேதி கீரிப்பட்டி பஞ்சாயத்துத் தலைவர் பதவிக்கு தேர்தல் நடந்தது. இதில் ஊர் மக்கள் சார்பில்அழகுமலை என்பவர் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

வெற்றி பெற்றவுடன் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்கள் நலனுக்காக உழைக்கப் போவதாக பேட்டி அளித்தார். ஆனாலும்பதவியேற்ற உடன் வழக்கம் போல அழகுமலையும் தனது பதவியை ராஜினாமா செய்து விடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.அதேபோல, இன்று தனது பதவியை, பதவியேற்ற உடனேயே ராஜினாமா செய்து விட்டார் அழகுமலை.

கீரிப்பட்டி ஊராட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று காலை பதவியேற்றுக் கொண்டார் அழகுமலை. அதன் பின்னர் கையோடுகொண்டு வந்திருந்த ராஜினாமா கடிதத்தை ஊராட்சி மன்ற அலுவலரிடம் கொடுத்து விட்டு வீட்டுக்கு கிளம்பினார்.

பதவியேற்ற உடனேயே அழகுமலை தனது பதவியை ராஜினாமா செய்து விட்டதால் கீரிப்பட்டி ஊராட்சி அலுலகத்தில் பரபரப்புஏற்பட்டது.

அழகுமலையின் ராஜினாமா மூலம், கீரிப்பட்டி பஞ்சாயத்துக்கு மீண்டும் பிரதிநிதி இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+