For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ரயில்வே: 31 காலியிடங்களுக்கு 1 லட்சம் பேர் போட்டி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தென்னக ரயில்வேயில் காலியாக உள்ள 31 பணியிடங்களுக்கு 1 லட்சம் பேர் இன்று தேர்வு எழுதினர்.

தென்னக ரயில்வேயில் காலியாக உள்ள, தாழ்த்தப்பட்டோர் பிரிவின் கீழ் வரும் 27 டிக்கெட் பரிசோதகர்கள் மற்றும் 4 எழுத்தர்பதவிக்கான நுழைவுத் தேர்வு இன்று தமிழகத்தின் முக்கிய நகரங்களில் நடந்தது.

மொத்தம் உள்ள 31 பதவியிடங்களுக்கு சுமார் 1 லட்சம் பேர் தேர்வு எழுதினர். தமிழகம் தவிர ஆந்திரா, கேரளா ஆகியமாநிலங்களைச் சேர்ந்தவர்களும் இந்தத் தேர்வில் கலந்து கொண்டனர். இவர்களுக்காக சென்னை, மதுரை, கோவை, திருச்சிஉள்ளிட்ட முக்கிய நகரங்களில் 164 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

குறைந்தபட்ச தகுதி 10வது வகுப்பு என்று கூறப்பட்டிருந்தாலும் தேர்வுக்கு வந்திருந்தவர்களில் ஏராளமான பட்டதாரிகளும்,முதுநிலை பட்டதாரிகளும் அடங்குவர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X