For Daily Alerts
Just In
ரயில்வே: 31 காலியிடங்களுக்கு 1 லட்சம் பேர் போட்டி
சென்னை:
தென்னக ரயில்வேயில் காலியாக உள்ள 31 பணியிடங்களுக்கு 1 லட்சம் பேர் இன்று தேர்வு எழுதினர்.
தென்னக ரயில்வேயில் காலியாக உள்ள, தாழ்த்தப்பட்டோர் பிரிவின் கீழ் வரும் 27 டிக்கெட் பரிசோதகர்கள் மற்றும் 4 எழுத்தர்பதவிக்கான நுழைவுத் தேர்வு இன்று தமிழகத்தின் முக்கிய நகரங்களில் நடந்தது.
குறைந்தபட்ச தகுதி 10வது வகுப்பு என்று கூறப்பட்டிருந்தாலும் தேர்வுக்கு வந்திருந்தவர்களில் ஏராளமான பட்டதாரிகளும்,முதுநிலை பட்டதாரிகளும் அடங்குவர்.
Comments
Story first published: Sunday, April 24, 2005, 5:30 [IST]