சதுர்வேதியை குண்டர் சட்டத்தில் அடைத்தது செல்லும்: உயர்நீதிமன்றம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தொழிலதிபர் மனைவியைக் கடத்தியது உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ள போலிச் சாமியார்சதுர்வேதியை குண்டர் சட்டத்தில் கைது செய்தது செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதன் பிறகு பல்வேறு பாலியல் முறைகேடுகள், சொத்துக் குவிப்பு, மோசடி உள்ளிட்ட வழக்குகளில் அவர் கைதுசெய்யப்பட்டார். குண்டர் சட்டத்தின் கீழும் கைது செய்யப்பட்டார்.
தன்னைக் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்தது செல்லாது என்று அறிவிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் சதுர்வேதி மனுதாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் கற்பகவிநாயகம், நாகப்பன் ஆகியோர், சதுர்வேதியை குண்டர் சட்டத்தில்அடைத்தது செல்லும் என்று கூறி அவரது மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications