புதிய நீதிக் கட்சி தனித்துப் போட்டி
Subscribe to Oneindia Tamil
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் இடைத் தேர்தலில் புதிய நீதிக் கட்சி தனித்துப் போட்டியிடப் போவதாக அக்கட்சி அறிவித்துள்ளது.
கடந்த சட்டசபைத் தேர்தலின்போது உதித்த ஜாதிக் கட்சியான புதிய நீதிக் கட்சி போட்டியிட்ட அனைத்துத் தொகுதிகளிலும்டெபாசிட் இழந்தது. பொதுத் தேர்தலைத் தொடர்ந்து அட்ரஸ் இல்லாமல் இருந்த புதிய நீதிக் கட்சி, தற்போது காஞ்சிபுரம் மற்றும்கும்மிடிப் பூண்டியில் இடைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மீண்டும் சுறுசுறுப்பாகியுள்ளது.
இக்கட்சியின் மாநில செயல்வீரர்கள் கூட்டம் இன்று காஞ்சிபுரத்தில் நடக்கிறது. அப்போது கட்சியின் வேட்பாளரை கட்சித்தலைவர் ஏ.சி.சண்முகம் அறிவிக்கிறார்.












Click it and Unblock the Notifications