வட மாநில இளைஞர்கள் ரயில் மறியல்; போலீஸ் தடியடி
திண்டுக்கல்:
திண்டுக்கல் ரயில் நிலையத்தில் வட மாநில இளைஞர்கள் மறியல் செய்தனர். இதையடுத்து அவர்களை தடியடி நடத்தி போலீஸார்கலைத்து விரட்டினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை தென்னக ரயில்வேயில் காலியாக உள்ள 31 பணியிடங்களுக்குத் தேர்வு நடந்தது. இதில்தமிழகம் மட்டுமல்லாது ஆந்திரா, ஒரிசா உள்ளிட்ட வெளி மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான இளைஞர்களும் கலந்துகொண்டனர்.
முன்பதிவு செய்யப்பட்டவர்களுக்கான பெட்டிகளில் அவர்கள் ஏறியதால், திண்டுக்கல் ரயில் நிலையத்தில் அவர்கள்அனைவரையும் டிக்கெட் பரிசோதகர்கள் இறக்கி விட்டனர்.
இதனால் கோபமடைந்த அவர்கள் அந்த வழியாக வந்த எக்ஸ்பிரஸ் ரயில்களை நிறுத்தி மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்துரயில்வே போலீஸார் மற்றும் உள்ளூர் போலீஸார் ஆகியோர், மறியல் செய்த இளைஞர்கள் மீது தடியடி நடத்தினர்.
தடியடி நடத்தி அனைவரையும் கலைத்து விட்டு முடங்கிக் கிடந்த ரயில் போக்குவரத்தை சரி செய்தனர்.
இந்த பிரச்சினை காரணமாக சுமார் 2 மணி நேரம் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications