கலவையிலேயே தங்க ஜெயேந்திரர் முடிவு
காஞ்சிபுரம்:
ஜெயேந்திரர் நேற்று சங்கரமடத்துக்கு வந்தார். மடத்தில் நடைபெற்ற ஸ்ரீசக்ர பூஜையில் அவர் கலந்து கொண்டார்.
காஞ்சி சங்கரமடத்தில் வருடந்தோறும் சித்ரா பெளர்ணமியையொட்டி ஸ்ரீ சக்ர பூஜை நடைபெறும். இந்த பூஜையில் கலந்துகொள்வதற்காக ஜெயேந்திரர் நேற்று கலவையிலிருந்து சங்கரமடத்துக்கு வந்தார்.
காஞ்சி சங்கரமடத்திற்கு ஜெயேந்திரர் வந்திருப்பதை அறிந்ததும் அங்கு பத்திரிகையாளர்கள் விரைந்தனர். அவர்களுக்கு முதலில்அனுமதி மறுக்கப்பட்டது. ஜெயேந்திரரின் சம்மதம் பெற்ற பின்னரே பத்திரிகையாளர்கள் மடத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.
மடத்தில் வைத்து பத்திரிகையாளர்களிடம் பேசிய ஜெயேந்திரர், தற்போது காஞ்சியில் தங்கும் எண்ணம் இல்லை எனவும்,கலவையிலேயே தங்கப்போவதாகவும் தெரிவித்தார். தன்னுடன் விஜயேந்திரரும் கலவையில் தங்குவார் என்றும் அவர்தெரிவித்தார்.
இதன் பிறகு தனது வக்கீல்களான சண்முகம், ரேவதி வாசுதேவன் ஆகியோர்களுடன் சிறிது நேரம் ஆலோசனை நடத்தியஜெயேந்திரர், காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று வணங்கி விட்டு கலவைக்கு புறப்பட்டு சென்றார்.