கண்ணகி கோவிலில் சித்ரா பவுர்ணமி விழா
மதுரை:
தமிழக, கேரள மாநில எல்லைப் பகுதியில் அமைந்துள்ள கண்ணகி கோவிலில் சித்ரா பவுர்ணமி விழா கொண்டாடப்பட்டது.
மதுரை மாவட்டத்தை ஒட்டி தமிழக கேரள மாநில எல்லையான வேங்கைக்காடு பகுதியில் கண்ணகிக்கு கோவில் உள்ளது. இந்தக்கோவில் அமைந்துள்ள இடம் எந்த மாநிலத்திற்குச் சொந்தமானது என்பதில் இரு மாநிலங்களுக்கும் இடையே பிரச்சினை இருந்துவருகிறது.
இதையடுத்து கடந்த சில ஆண்டுகளாக, தேனி மற்றும் இடுக்கி மாவட்ட ஆட்சித் தலைவர்கள் கூடிப்பேசி கண்ணகி கோவிலில்பிரச்சினைகள் இல்லாமல் பக்தர்கள் வழிபாடு செய்வது குறித்து ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள்.
அந்த வகையில் இந்த ஆண்டும் சித்ரா பவுர்னமி விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
தமிழகத்திலிருந்து ஏராளமான பக்தர்கள் கண்ணகி கோவிலுக்கு வந்து சிறப்பு பூஜைகளைச் செய்தனர்.பலத்த போலீஸ்பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.
சுகாதாரத் துறை சார்பில் மருத்துவ முகாம்களும் கண்ணகி கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்தன. குமுளி பஸ்நிலையத்திலிருந்து சிறப்புப் பேருந்துகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
மங்கள தேவி (கண்ணகி) அறக்கட்டளை சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.












Click it and Unblock the Notifications