காஞ்சிபுரம்: நெசவாளர்களைக் குறி வைக்கும் அதிமுக, திமுக!
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரத்தில் உள்ள நெசவாளர்களின் பிரச்சினைகளைத் தீர்க்க பாடுபடுவோம் என்று திமுக மற்றும் அதிமுக வேட்பாளர்கள்உறுதி மொழி அளித்துள்ளனர்.
காஞ்சிபுரம் அதிமுக வேட்பாளராக மைதிலி திருநாவுக்கரசு மற்றும் திமுக சார்பில் பி.எம்.குமார் ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.மைதிலியின் கணவர் திருநாவுக்கரசுவின் மரணத்தைத் தொடர்ந்தே இங்கு தேர்தல் நடக்கிறது.
அதேபோல, திமுகவேட்பாளர் பி.எம்.குமார், முன்னாள் எம்.எல்.ஏ. முருகேசனின் மகன் ஆவார். இரு வேட்பாளர்களும் வாரிசுவேட்பாளர்கள் என்பதால் போட்டி சுவாரஸ்யமாகியுள்ளது.
இந்த நிலையில் காஞ்சிபுரத்தின் முக்கியப் பிரச்சினைகளைத் தீர்ப்பதாக கூறி இருவரும் ஓட்டு வேட்டையாடி வருகின்றனர்.
மைதிலி திருநாவுக்கரசு கூறுகையில், காஞ்சிபுரத்தைப் பொருத்தவரை நெசவாளர்கள்தான் அதிகம். அவர்களுக்கு பலபிரச்சினைகள் உள்ளன. அவற்றைத் தீர்க்க பாடுபடுவேன். சட்டசபையில் அவர்களுக்காக குரல் கொடுப்பேன் என்று கூறுகிறார்மைதிலி. இன்று முதல் தீவிர ஓட்டு வேட்டையை அவர் தொடங்குகிறார்.
திமுக வேட்பாளர் பி.எம்.குமார் கூறுகையில், நெசவாளர்களின் பிரச்சினையைத் தீர்க்க அதிமுக அரசு தவறி விட்டது. அவர்களதுநீண்ட நாள் கோரிக்கைகள், நீண்ட காலமாகவே கிடப்பில் போடப்பட்டுள்ளது. அவர்களது பிரச்சினைகளுக்கு நான்முக்கியத்துவம் கொடுப்பேன்.
எனது தந்தை எம்.எல்.ஏவாக இருந்தபோது காஞ்சிபுரம் தொகுதியில் ஏராளமான தொழிற்சாலைகளைக் கொண்டு வரக்காரணமாக இருந்தார். அதேபோல நானும் அனைத்து வளர்ச்சிகளையும் தொகுதியில் ஏற்படுத்த பாடுபடுவேன் என்றார்.
இரு முக்கியவேட்பாளர்களும் நெசவாளர்களைக் குறி வைத்து தேர்தல் களத்தில் இறங்கியிருப்பதால் இவர்களின் ஓட்டுக்கள்யாருக்குக் கிடைக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.












Click it and Unblock the Notifications