காரில் சைரன்: திருமாவளவன் மீது புது வழக்கு
காஞ்சிபுரம்:
காரில் சிவப்பு சுழல் விளக்குடன் வந்ததாக விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் மீது போலீஸார் வழக்குப் பதிவுசெய்துள்ளனர்.
இதுதொடர்பாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
காஞ்சிபுரத்திற்கு திருமாவளவன் வந்தபோது, அவரது காரில் சிவப்பு சுழல் விளக்கு பொருத்தப்பட்டிருந்தது. தான் ஒரு முக்கியப்பொறுப்பில் இருப்பதைப் போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி அதை பொதுமக்கள் நம்ப வைப்பதற்காக இவ்வாறு அவர்வந்துள்ளார்.
இது அரசு விதிமுறைகளுக்குப் புறம்பானது. இதுகுறித்து கிராம நிர்வாக அதிகாரி மணி கொடுத்த புகாரின் பேரில் பெரிய காஞ்சிபோலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
10 நாட்கள் பிரசாரம்:
இதற்கிடையே காஞ்சிபுரம், கும்மிடிப்பூண்டி தொகுதிகளில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர்திருமாவளவன் 10 நாட்கள் தீவிரப் பிரசாரம் மேற்கொள்ளவுள்ளார்.
இதுதொடர்பாக காஞ்சிபுரத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், விடுதலைச் சிறுத்தைகளின் தனித்தன்மையை நிரூபிக்க இடைத் தேர்தலில்போட்டியிடுகிறோம். மற்ற சமூகத்தினர் எங்களுக்கு எந்த அளவுக்கு ஆதரவு தருகிறார்கள் என்பதையும் தெரிந்து கொள்ளவுள்ளோம்.
பாமகவுடனான எங்களது உறவு தமிழ் மொழி உணர்வினால் ஏற்பட்டது. எனவே தேர்தலில் போட்டியிடுவதால் அவர்களுடனான எங்களது உறவுபாதிக்கப்படாது.
மே 2ம் தேதி முதல் 12ம் தேதி வரை 5 நாட்கள் காஞ்சிபுரத்திலும், 5 நாட்கள் கும்மிடிப்பூண்டியிலும் நான் தேர்தல் பிரசாரம் செய்யவுள்ளேன்.
இடைத் தேர்தல் பாதுகாப்புக்கு மத்திய துணை ராணுவப் படைகளை பயன்படுத்த வேண்டும் என்றார் திருமாவளவன்.