வீட்டோ அந்தஸ்து: கோபி அன்னான் மழுப்பல்
டெல்லி:
ஐ.நா.பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு வீட்டோ அதிகாரத்துடன் கூடிய அந்தஸ்து வழங்குவது குறித்து தன்னால் முடிவெடுக்கமுடியாது என்று கோபி அன்னான் கூறினார்.
ஐ.நா.பொதுச்செயலாளர் 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். டெல்லியில் இன்று அவர் கூறுகையில், புதிய நாடுகளுக்குஅங்கத்துவம் அளிப்பதற்காக ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலை விரிவுபடுத்துவது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல.
பல நாடுகள் ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் இடம் வேண்டும் என்று கோரி வருகின்றன. இந்த கோரிக்கையை என்னால் மட்டும்நிறைவேற்ற முடியாது. செப்டம்பர் மாதம் ஐ.நா.சபைக்கூட்டம் நடைபெற உள்ளது. அந்தக் கூட்டத்தில் இது குறித்து அனைத்துநாடுகளின் ஆலோசனை கேட்ட பிறகு தான் முடிவெடுக்க முடியும் என்றார் கோபி அன்னான்.
கர்நாடகத்தின் ஒட்டுமொத்த சாப்ட்வேர் ஏற்றுமதியில் 63 சதவீதம் அமெரிக்காவுக்கும், 23 சதவீதம் ஐரோப்பிய நாடுகளையும்சென்றடைந்துள்ளன.
மொத்த சாப்ட்வேர் உற்பத்தியில் டாப் 10 நிறுவனங்களின் பங்கு 50 சதவீதமாக இருந்துள்ளது.
மைசூர், மங்களூரில் இருந்தும் ரூ. 876 கோடிக்கு சாப்ட்வேர் ஏற்றுமதி நடந்துள்ளது.
கர்நாடகத்தின் ஹார்டுவேர் ஏற்றுமதி கடந்த ஆண்டில் ரூ. 1,768 கோடியைத் தாண்டியுள்ளது. ஹார்டுவேர் தயாரிப்பில் ஈடுபடகடந்த ஆண்டில் 8 புதிய நிறுவனங்களுக்கும் அனுமதி தரப்பட்டுள்ளது. இதன்மூலம் பெங்களூரில் ஹார்டுவேர் தயாரிப்பில்ஈடுபட்டுள்ள நிறுவனங்களின் எண்ணிக்கை 44 ஆக உயர்ந்துள்ளது.












Click it and Unblock the Notifications