காஞ்சியில் 20 பேர், கும்மிடிப்பூண்டியில் 16 பேர் போட்டி

Subscribe to Oneindia Tamil

காஞ்சிபுரம்/கும்மிடிப்பூண்டி:

காஞ்சிபுரம் மற்றும் கும்மிடிப்பூண்டி சட்டசபைத் தொகுதி இடைத் தேர்தலில் மொத்தம் 36 பேர் இறுதிப் போட்டியில் உள்ளனர்.இரு தொகுதிகளிலும் தாக்கல் செய்த வேட்பு மனுக்களை வாபஸ் பெற கடைசி நாளான நேற்று மாலை 3 மணிக்குப் பிறகு, இறுதிவேட்பாளர்கள் பட்டியலை தேர்தல் அதிகாரிகள் அறிவித்தனர்.

காஞ்சிபுரம் தொகுதியில் புதிய நீதிக் கட்சி வேட்பாளர் உள்பட 3 பேர் தங்களது மனுக்களை வாபஸ் பெற்றனர். இதையடுத்துஅங்கு இறுதியாக 20 பேர் களத்தில் நிற்கின்றனர்.

அந்த வேட்பாளர்கள், அவர்களது கட்சிகள், சின்னங்கள் விவரம்:

மைதிலி திருநாவுக்கரசு (அதிமுக - இரட்டை இலை)
பி.எம்.குமார் (திமுக- உதயசூயன்)
ந.இளஞ்செழியன் (ஐக்கிய ஜனதாதளம் - மோதிரம்)
சு.சிதம்பரம் (அகில பாரத இந்து சபை - தேங்காய்)
இவர்களைத் தவிர 16 சுயேச்சைகளும் களத்தில் உள்ளனர்.

கும்மிடிப்பூண்டி:

கும்மிடிப்பூண்டியில் நேற்று 3 பேர் தங்களது வேட்பு மனுக்களை வாபஸ் பெற்றனர். இதையடுத்து இறுதியாகப் போட்டியிடுவோர்

எண்ணிக்கை 16 ஆக குறைந்தது. அவர்களது விவரம்:

கே.எஸ்.விஜயக்குமார் (அதிமுக- இரட்டை இலை)
வெங்கடாசலபதி (திமுக- உதயசூயன்)

மேலும் 14 சுயேச்சைகளும் களத்தில் உள்ளனர்.

இரு தொகுதிகளிலும் திமுக, அதிமுக இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது. இறுதி வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டதைத்தொடர்ந்து தேர்தல் பிரசாரம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது.

ஜெ, கருணாநிதி பிரச்சாரம்:

முதல்வர் ஜெயலலிதா வரும் 3ம் தேதி இரு தொகுதிகளிலும் தீவிர தேர்தல் பிரசாரத்தைத் தொடங்குகிறார். அவரைத் தொடர்ந்துதிமுக தலைவர் கருணாநிதி தனது தேர்தல் பிரசாரத்தை மேற்கொள்ளவுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+