For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வெளிநாடுகளில் தவிக்கும் 7,000 இந்தியர்கள்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

முறையான ஆவணங்கள் இல்லாமலும், மேலும் பல்வேறு காரணங்களாலும், வெளிநாடுகளில் 6,944 இந்தியர்கள் சிக்கித்தவிக்கிறார்கள் என்று மத்திய வெளியுறவுத்துறையின் குடிபெயர்வுப் பிரிவு இயக்குனர் பார்த்தசாரதி கூறியுள்ளார்.

வெளியுறவுத் துறையின் குடிபெயர்வுப் பிரிவின் சார்பில், வெளிநாடுகளில் உள்ள அங்கீகாரம் பெற்ற, அங்கீகாரம் பெறாதவேலை வாய்ப்பு நிறுவனங்கள், ஏஜென்டுகள் குறித்த புத்தகத்தை பார்த்தசாரதி சென்னையில் வெளியிட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், சரியான ஆவணங்களுடன் செல்லாமல் பல இந்தியர்கள் வெளிநாடுகளுக்குசென்று மாட்டிக் கொள்கிறார்கள். இவ்வாறு வெளிநாடுகளில் சிக்கித் தவிப்போரின் எண்ணிக்கை 6,944 ஆகும். இவர்களில்செளதி அரேபியாவில் மட்டும் 1,082 பேர் சிக்கியுள்ளனர்.

வெளிநாடுகளில் அரசுகளால் அங்கீகரிக்கப்பட்ட வேலை வாய்ப்பு ஏஜென்டுகள் குறித்த புத்தகத்தை வெளியுறவுத் துறைவெளியிட்டுள்ளது. இந்த புத்தகத்தில் அங்கீகாரம் பெற்ற ஏஜென்டுகள், அங்கீகாரம் பெறாத போலி ஏஜென்டுகள் குறித்த முழுவிவரம் அடங்கியுள்ளது.

வெளிநாடுகளில் வேலை பார்ப்பவர்களில் இந்தியர்கள்தான் அதிகம் ஏமாற்றப்படுகிறார்கள்.

இதுபோல ஏமாற்றுதல்களைத் தவிர்க்க, ஏஜென்டுகள் மூலம் விசா, பாஸ்போர்ட் போன்றவற்றை பெறுவதைத் தவிர்க்க வேண்டும்.

தவறான நபர்கள் மூலம், தவறான ஆவணங்கள் மூலம் வெளிநாடுகளுக்குச் சென்று அங்கு சிறையில் சிக்கிக் கொள்வதிலிருந்துஇளைஞர்களைக் காக்கும் நோக்கில் இந்த நூல் வெளியிடப்பட்டுள்ளது என்றார் பார்த்தசாரதி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X