For Quick Alerts
For Daily Alerts
Just In
தேர்தல் விதிமீறல்: அதிமுக மீது 29 வழக்குகள் பதிவு!
கும்மிடிப்பூண்டி:
கும்மிடிப்பூண்டி இடைத் தேர்தலில் தேர்தல் விதிமீறலில் ஈடுபட்டதாக கூறி அதிமுக மீது 29 வழக்குகள் பதிவாகியுள்ளன. திமுக மீது 10வழக்குகள் போடப்பட்டுள்ளன.
இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள காஞ்சிபுரம் மற்றும் கும்மிடிப்பூண்டியில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. இதை மீறிநடப்போர் மீது வழக்குகள் போடப்பட்டு வருகின்றன.
அதிகபட்சமாக அதிமுக மீது 29 வழக்குகளும், திமுக மீது 10 வழக்குகளும் போடப்பட்டுள்ளன. விடுதலைச் சிறுத்தைகள் மீது 3வழக்குகளும், மதிமுக மீது 2 வழக்குகளும், பாமக, காங்கிரஸ் மீது தலா 1 வழக்கும் பதிவாகியுள்ளன.
தேர்தல் விதிமீறலில் தொடர்ந்து ஈடுபடுவதை அரசியல் கட்சிகள் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்என மாவட்ட தேர்தல் அதிகாரி எச்சரித்துள்ளார்.
Comments
Story first published: Monday, May 2, 2005, 5:30 [IST]