கிருஷ்ணகிரியில் வாந்தி-பேதி: நூற்றுக்கணக்கானவர்கள் பாதிப்பு
Subscribe to Oneindia Tamil
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பணப்பள்ளி பகுதியில் மலை கிராமங்களில் வாந்தி-பேதிக்கு 4 பேர் பலியாகியுள்ளனர். மேலும்நூற்றுக்கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இப் பகுதியில் கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் கடும் மழையால் குடிநீர் குளங்களில் அசுத்தம் கலந்துள்ளது.
இவர்களில் இரு பெண்களும் ஆண்களும் உயிரிழந்துள்ளனர். மேலும் 8 வயது சிறுமி உள்பட 7 பேரின் நிலைமைகவலைக்கிடமாக உள்ளது.
இப் பகுதிக்கு மருத்துவ, சுகாதாரக் குழுக்கள் விரைந்துள்ளன. 11 இடங்களில் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசிபோடப்பட்டு வருகிறது. வீடு வீடாக தொற்றுத் தடுப்பு மாத்திரைகளும் வழங்கப்பட்டு வருகின்றன.












Click it and Unblock the Notifications