For Daily Alerts
Just In
தேர்தல் பணி: அரசு ஊழியர்களுக்கு கலெக்டர் எச்சரிக்கை
திருவள்ளூர்:
தேர்தல் பணியில் ஈடுபட மறுத்து அதற்கான உத்தரவுகளைப் பெற மறுக்கும் அரசு ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கைஎடுக்கப்படும் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான தங்கச்சாமி எச்சரிக்கைவிடுத்துள்ளார்.
இந்தப் பணியை விரும்பாத சில அரசு ஊழியர்கள் நியமன உத்தரவை வாங்க மறுத்து வருகிறார்கள். சிலர் விடுப்பில் செல்லமுயற்சிப்பதாகவும் தெரிகிறது.
தேர்தல் பணியை செய்ய மறுக்கும் அரசுப் பணியாளர்கள் மீது துறை சார்ந்த ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றுகூறியுள்ளார் தங்கச்சாமி.
Comments
Story first published: Wednesday, May 4, 2005, 5:30 [IST]