ஹைதி நாட்டில் இந்தியர் கடத்தல்
Subscribe to Oneindia Tamil
போர்-அவ்-பிரின்ஸ் (ஹைதி):
ஹைதி நாட்டில் இந்தியத் தொழிலதிபரும், அமைதி காக்கும் ஐநா படையினருக்கு உதவி வந்த ரஷ்ய காண்ட்ராக்டர் ஒருவரும்கடத்தப்பட்டுள்ளனர்.
கரீபியன் தீவு நாடான ஹைதியில் சர்வாதிகார ஆட்சி புரிந்து வந்த அரிஸ்டிட் அரசு 2004ம் ஆண்டில் கவிழ்ந்தது. அவர் வெளிநாட்டுக்குத்தப்பியோடிவிட்டார். அன்றிலிருந்து அவரது ஆதரவுப் படையினருக்கும் எதிர் கோஷ்டிகளுக்கும் இடையே பெரும் ஆயுத மோதல் நடந்துகொண்டுள்ளது.
இந் நிலையில் இந்தக் கடத்தல் நடந்துள்ளது. அரிஸ்டிட் அரசு கவிழ்ந்த பின்னர் வெளிநாட்டினர் கடத்தப்படுவது இதுவே முதல்முறையாகும்.
கடத்தல்காரர்கள் பெரும் பணயத் தொகை கேட்பதாக ஐநா அமைதிப் படை தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் கடத்தல் கும்பலுடன்பேச்சுவார்த்தை எதையும் ஐநா இதுவரை தொடங்கவில்லை.












Click it and Unblock the Notifications