இங்கிலாந்து தேர்தல்: பிளேர் மீண்டும் வெற்றி
Subscribe to Oneindia Tamil
லண்டன்:
இங்கிலாந்து பாராளுமன்றத்துக்கு நடந்த தேர்தலில், தற்போதைய பிரதமர் டோனி பிளேரின் தொழிலாளர் கட்சி மீண்டும் பெரும்வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம் மூன்றாவது முறையாக பிளேர் ஆட்சியைப் பிடிக்கிறார்.
இங்கிலாந்து பாராளுமன்றத்திற்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. 646 தொகுதிகளில் 645 தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில்பெரும்பான்மைக்குத் தேவையான 324 இடங்களை டோனி பிளேரின் தொழிலாளர் கட்சி வென்றுள்ளது.
தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. கடந்த நாடாளுமன்றத்தில் பிளேரின் கட்சிக்கு 410 எம்பிக்கள் இருந்தனர். ஆனால்,இம்முறை 70 இடங்கள் வரை அக் கட்சிக்குக் குறையும் என்று தெரிகிறது. இராக் போரில் அவர் எடுத்த நிலை காரணமாக, அவரதுகட்சிக்கு இந்தச் சரிவு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications