For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மேலும் 700 மத்திய ரிசர்வ் படையினர் வருகை

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:


காஞ்சிபுரம், கும்மிடிப்பூண்டி சட்டசபை இடைத் தேர்தல் பாதுகாப்புக்காக மேலும் 700 மத்திய ரிசர்வ் படை போலீஸார்வரவுள்ளனர்.

வழக்கமாக இடைத் தேர்தல் பாதுகாப்பை அம் மாநில போலீசார் தான் மேற்கொள்வர். ஆனால், தமிழக போலீசார் ஆளும் கட்சிதொண்டர்கள் மாதிரி செயல்பட ஆரம்பித்துவிட்டதால், அவர்கள் மீதான நம்பிக்கையை தேர்தல் கமிஷன் இழந்துள்ளது.

இதையடுத்து சட்டசபை இடைத் தேர்தல் பாதுகாப்புப் பணியில் மத்திய பாதுகாப்புப் படையினரை ஈடுபடுத்த முடிவுசெய்துள்ளது.

மொத்தம் ஆயிரம் பேர் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

இவர்களில் 300 பேர் பிகார், திரிபுரா உள்ளிட்ட பகுதிகளிலிருந்து சென்னை வந்தனர். இன்னும் 700 பேர் அடுத்த சில நாட்களில்வரவுள்ளனர்.

தேவைப்பட்டால் இந்த வீரர்களின் எண்ணிக்கை மேலும் அதிகமாகும் என்று தெரிகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X