ஸ்ரீரங்கம் ஆலய சித்திரைத் தேரோட்டம்
Subscribe to Oneindia Tamil
ஸ்ரீரங்கம்:
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் சித்திரைத் திருவிழாவையொட்டி இன்று தேரோட்டம் நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள்ரங்கா.. ரங்கா.. கோஷத்துடன் வடம் பிடித்து தேரை இழுத்தனர்.
விருப்பன் திருவிழா எனப்படும் இந்த விழாவில், தங்களது நேர்த்திக் கடன்களை செலுத்தி வழிபாடுகள் பக்தர்கள். இதற்காகஇன்று அதிகாலையில் நடை திறக்கப்பட்டு, சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
காலை 6 மணிக்கு பக்தர்கள் ரங்க கோஷத்துடன் வடம் பிடித்து இழுக்க, சித்திரை வீதிகளில் தேர் உலா வந்தது. 9 மணிக்கு தேர்மீண்டும் நிலையை அடைந்தது.
இந்த விழாவையொட்டி பல்லாயிரக்கணக்கான மக்கள் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் ஸ்ரீரங்கத்தில் குவிந்திருந்தனர். இந்நிகழ்ச்சியையொட்டி திருச்சியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.












Click it and Unblock the Notifications