ஓசி பயணம்: ரயில்வே அதிகாரிகளின் தாராளம்

Subscribe to Oneindia Tamil

சிலிகுரி:

மேற்கு வங்காளத்திலுள்ள சிலிகுரி ரயில்வே ஸ்டேஷனில் டிக்கெட் கொடுக்க அலுவலர் வராததால் நூற்றுக்கணக்கானபயணிகளை ,ஸ்டேஷன் மாஸ்டர் "சும்மா அனுப்பிய விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்காள மாநிலம் சிலிகுரி ரயில்வே ஸ்டேஷனில் இருந்து அலிபுர்துவார் எக்ஸ்பிரஸ் ரயிலில் செல்வதற்காக நேற்று100க்கும் மேற்பட்ட பயணிகள் வந்துள்ளனர். அவர்கள் அனைவரும் டிக்கெட் எடுக்க சென்ற போது கவுண்டர்மூடப்பட்டிருந்தது.

அந்த சமயத்தில் ரயிலும் வந்ததால் பயணிகள் அனைவரும் டிக்கெட் தரக்கோரி ஸ்டேஷன் மாஸ்டரை முற்றுகையிட்டனர். அவர்உடனடியாக உயரதிகாரிகளை அணுகி விவரத்தை கூறினார்.

அலிபுர்துவார் எக்ஸ்பிரஸ் ஏற்கனவே 1 மணி நேரத்திற்கு அதிகமாக தாமதமாக வந்ததால் பயணிகள் அனைவரையும் டிக்கெட்கொடுக்காமல் அனுப்புமாறு அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இதைத் தொடர்ந்து 100க்கும் மேற்பட்ட பயணிகள் அனைவரையும் ஸ்டேஷன் மாஸ்டர் டிக்கெட் எடுக்காமல் ரயிலில்ஏறிக்கொள்ளுமாறு கூறினர். பயணிகளும் மிகவம் சந்தோஷமாக ரயிலில் ஓசிப்பயணம் சென்றுள்ளனர்.

இப்போது இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் நடந்த அன்று டிக்கெட் கொடுக்க வரவேண்டியஅலுவலர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று வடக்கு ரயில்வே மக்கள் தொடர்பு அதிகாரி தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+