இந்தியா ஒளிர்ந்தது.. ரூ.63 கோடி இழந்தது

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

தங்களது ஆட்சியில் இந்தியா ஒளிர்கிறது (India Shining) என்ற கோஷத்தை கிளப்பிவிட்டு அதை நாடு முழுவதும் விளம்பரம் செய்யபாஜக ஆட்சியில் முறைகேடாக அரசுப் பணம் ரூ. 63 கோடி வீணடிக்கப்பட்டதாக மத்திய கணக்குத் தணிக்கை அதிகாரியின் அறிக்கையில்புகார் கூறப்பட்டுள்ளது.

கடந்த நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வந்தபோது இந்தியா ஒளிர்கிறது, பீல் குட் பேக்டர் போன்ற கோஷங்களை திடீரெனகிளப்பிவிட்டது பாஜக. இந்தியா திடீரென எங்கோயோ போய்விட்டது என்றரீதியில் விளம்பரங்களை வெளியிட்டனர்.

இதற்காக கோடிக்கணக்கான அரசுப் பணம் செலவிடப்பட்டது. நாட்டின் முன்னணி டிவி விளம்பர நிறுவனங்கள், பத்திரிக்கை விளம்பரநிறுவனங்களைப் பிடித்து டிசைன் டிசைனாக விளம்பரங்கள் உருவாக்கப்பட்டன.

இந்த விளம்பரங்கள் மூலம் இந்தியா ஒளிர்ந்தது. இதன்மூலம் பலனடைந்தவர்கள் தனியார் தொலைக்காட்சி நிறுவனங்களும், பத்திரிக்கைஅதிபர்களும் தான். இந்தியாவில் வறுமை காணாமல் போய், செல்வமும் வளமும் தழைப்பதாக ஒரு மாயையை உருவாக்க முயன்றனர்.

இந்த விளம்பரங்களுக்காக பெரிய அளவில் பணம் ஏதும் செலவாகிவிடவில்லை என பாஜக அரசு கூறி வந்தது.

இந் நிலையில் கடந்த இரு ஆண்டுகளுக்கான மத்திய அரசின் கணக்குத் தணிக்கையை கம்ட்ரோலர் ஆப் இந்தியா வெளியிட்டுள்ளார்.

அதில், பாஜகவின் கட்சி விளம்பரமான இந்தியா ஒளிர்கிறது பிரச்சாரத்துக்கா மத்திய அரசின் நிதி ரூ. 63.23 கோடி சட்ட விரோதமாகசெலவிடப்பட்டதாக கணக்குத் தணிக்கை அதிகாரியின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த செலவுகளுக்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதலையும் பாஜக அரசு பெறவில்லை என்றும், இத்யாதி செலவுகள் என்ற பெயரில் இந்தசெலவை சேர்த்துவிட்டிருக்கிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

குறைந்த விலைக்கு ஹோட்டல்கள் போணி:

அதே போல தனியார்மயமாக்குகிறோம் என்ற பெயரில் பல அரசு நிறுவனங்களை பாஜக அரசு விற்றது. குறிப்பாக அரசுக்குச் சொந்தமானசுற்றுலாத்துறை ஹோட்டல்கள் அடிமாட்டு விலைக்கு வேண்டியவர்களுக்கு விற்கப்பட்டன.

இதையும் கணக்குத் தணிக்கை அதிகாரியின் அறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது. மும்பை ஜூகு சென்டார், மும்பை விமான நிலைய சென்டார் ஹோட்டல் ஆகியவைஅரசுக்கு எந்தவிதமான லாபமும் இல்லாத வகையில் தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.

இதே போல நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இருந்த சுற்றுலாத்துறைக்குச் சொந்தமான பல நூறு கோடி மதிப்புள்ள ஹோட்டல்களும் வேண்டியதொழிலதிபர்களுக்கு அள்ளித் தரப்பட்டுள்ளன.

இந்த விவகாரம் குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+