மீண்டும் லாக்- அப் சாவு: போலீஸ் மீது கல்வீச்சு- தடியடி, களேபரம்
சென்னை:
சென்னையில் விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டவர் மர்மமான முறையில் இறந்தார். இதனால்ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள், பொதுமக்கள் காவல் நிலையம் மீதும், போலீஸார் மீதும் கல்வீசித் தாக்கினர். இதையடுத்து அவர்கள்மீது போலீசார் தடியடி நடத்தினர்.
அயனாவரம் சோலை தெருவைச் சேர்ந்தவர் பழனி. பிரிட்டானியா பிஸ்கட் நிறுவனத்தில் வேலை பார்த்து விருப்ப ஓய்வு பெற்றவர்.இவரது மனைவி ரோஸி. இவர்களது சுதா, மகன் அய்யப்பன்.
அப்போது அங்கு பழனியும், ரோஸியும் சென்றிருந்தனர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே வாய்த் தகராறு ஏற்பட்டுகைலகலப்பில் முடிந்துள்ளது.
இதுகுறித்து அயனாவரம் காவல் நிலையத்தில் வேணு புகார் கொடுத்தார். இதன் பேரில் பழனியை போலீஸார் விசாரணைக்காக அழைத்துச்சென்றனர்.
போலீசாரின் காவலில் இருந்த பழனி மர்மமான முறையில் இறந்துவிட்டார்.
காவல் நிலையத்தில் பழனி மயங்கி விழுந்தாகவும், இதையடுத்து அவரை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசென்றதாகவும், அங்கு அவர் இறந்து விட்டதாகவும் போலீசார் வழக்கம் போல் விளக்கம் தந்தனர்.
போலீஸ் காவலில் பழனி மர்மமாக இறந்த செய்தி அறிந்ததும் அவரது உறவினர்கள் காவல் நிலையம் முன் கூடி போலீஸாருக்கு எதிராகபோராட்டத்தில் குதித்தனர். போலீஸார் அடித்ததால்தான் பழனி இறந்து விட்டதாக அவர்கள் புகார் கூறினர்.
நேரம் ஆக ஆக பழனியின் உறவினர்கள் ஆத்திரமடைந்து, கல்லவீச்சில் இறங்கினர். காவல் நிலையம் மீதும், போலீஸார் மீதும் சரமாரியாககற்களை வீசித் தாக்கினர்.
இதையடுத்து அவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தினர். இரவு 11 மணி வரை இந்த களேபரம் நீடித்ததால் அப்பகுதியே பெரும்பரபரப்பாக காணப்பட்டது.












Click it and Unblock the Notifications