இடைத் தேர்தல்: திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு- கருத்துக் கணிப்பில் தகவல்
சென்னை:
காஞ்சிபுரம் மற்றும் கும்மிடிப்பூண்டி சட்டசபை இடைத் தேர்தலில் திமுக வெற்றி பெற பிரகாசமான வாய்ப்புகள் உள்ளதாகசென்னை லயோலா கல்லூரி மாணவர்களின் கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது.
சென்னை லயோலா கல்லூயின் இதழியல் மற்றும் தகவல் தொடர்பியல் துறை மாணவர்கள் காஞ்சிபுரம், கும்மிடிப்பூண்டிதொகுதிகளில் கருத்துக் கணிப்பு நடத்தினர். இந்த கருத்துக் கணிப்பின் முடிவுகளை கருத்துக் கணிப்புக் குழுவின் தலைவர்பேராசியர் ராஜநாயகம் செய்தியாளர்களிடம் வெளியிட்டார்.
காஞ்சிபுரத்தில் கருத்துக் கணிப்பில் கலந்து கொண்டவர்களில் 59.3 சதவீதம் பேர் திமுகவுக்கு வாக்களிக்கப் போவதாகவும், 28.3சதவீதம் பேர் அதிமுகவுக்கு வாக்களிக்கப் போவதாகவும் தெரிவித்தனர்.
கும்மிடிப்பூண்டியில், திமுகவுக்கு ஆதரவாக 53.9 சதவீதம் பேரும், அதிமுகவுக்கு ஆதரவாக 34 சதவீதம் பேரும் கருத்துதெரிவித்தனர்.
தமிழக அளவில் எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பில், அடுத்தத் தேர்தலில் திமுக கூட்டணியே ஆட்சி அமைக்கும் என்று 57.8சதவீதம் பேரும், அதிமுகவுக்கு ஆதரவாக 32.6 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்தனர்.
அடுத்த முதல்வர் யார் என்ற கேள்விக்கு கருணாநிதியே அடுத்த முதல்வராக வருவார் என்று 82 சதவீதம் பேர் கருத்துதெரிவித்தனர். மத்திய அரசின் செயல்பாடுகள் திருப்தி அளிப்பதாக 74.7 சதவீதம் பேர் வாக்களித்தனர் என்றார் ராஜநாயகம்.












Click it and Unblock the Notifications