For Daily Alerts
Just In
மத்திய அரசுக்கு ஆதரவு வாபஸ்: மாயாவதி மிரட்டல்
டெல்லி:
வருமானத்தை மீறி சொத்து குவித்த வழக்கில் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவி மாயாவதியின் வீட்டில் சிபிஐ அதிரடி ரெய்ட்நடத்தியதைத் தொடர்ந்து, மத்தியில் காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு வெளியில் இருந்து கொடுத்து வரும் ஆதரவை வாபஸ் பெறப்போவதாக அவர் மிரட்டல் விடுத்துள்ளார்.
அவரது கட்சிக்கு மக்களவையில் 19 எம்பிக்களும் மாநிலங்களவையில் 6 எம்பிக்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.காங்கிரஸ் ஆட்சியில் இருக்க அவரது ஆதரவும் அவசியம்.
இந் நிலையில் இன்று நாடாளுமன்றம் கூடியதும் பகுஜன் சமாஜ் எம்பிக்கள் இந்த விவகாரத்தைக் கிளப்பினர். இதனால் அவையில்கூச்சல் நிலவியது.
ராஜ்யசபா எம்பியான மாயாவதி நிருபர்களிடம் பேசுகையில், மத்திய அரசுக்கு ஆதரவை வாபஸ் பெறுவது குறித்து யோசித்துவருவதாகக் கூறினார்.
Comments
Story first published: Thursday, May 12, 2005, 5:30 [IST]