போலீசை ஏமாற்றும் திமுகவினர்: பொன்னையன்
காஞ்சிபுரம் & கும்மிடிப்பூண்டி:
தொகுதிகளுக்கு சம்பந்தமே இல்லாத திமுகவினர் போலீசாரை ஏமாற்றிவிட்டு பெரும் எண்ணிக்கையில் காஞ்சி,கும்மிடிப்பூண்டியில் சுற்றிக் கொண்டிருப்பதாக அதிமுக புகார் கூறியுள்ளது.
இது குறித்து காஞ்சி அதிமுக தேர்தல் பொறுப்பாளரும் அமைச்சருமான பொன்னையன் கூறுகையில்,
ஆனால், திமுகவினர் போலீசை ஏமாற்றிவிட்டு தொகுதிகளுக்குள் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். மாஜி அமைச்சர்களானதுரைமுருகன், பொன்முடி, கே.என். நேரு, பெரியசாமி, கேகேஎஸ்எஸ்ஆர், முல்லை வேந்தன் ஆகியோரும் பரிதி இளம் வழுதியும்தொகுதிக்குள்ளேயே 5,000 வெளியாட்களுடன் சுற்றி வருகிறார்கள்.
அவர்களை போலீசார் விரட்டிவிட்டும் கூட மீண்டும் அங்கு வந்துவிட்டனர். ஐயங்கார் குளத்தில் தென்னந்தோப்பிலும், வானவில்நகர், சேதுராமன் தெரு ஆகிய இடங்களில் அவர்கள் தங்கியுள்ளார்கள். போலி அடையாள அட்டைகளை வைத்து கள்ள ஓட்டுபோடுவது தான் அவர்களது திட்டம்.
கே.ஜே. ராவ் மிகச் சிறப்பாக செயல்படுகிறார். அவரது செயல்பாட்டால் அதிமுக அமோக வெற்றி பெறும் என்றார் பொன்னையன்.
இதற்கிடையே கும்மிடிப்பூண்டி அதிமுக வேட்பாளர் விஜய்குமார் கூறுகையில்,
இங்கு திமுகவினர் பெரும் அராஜகத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கள்ள ஓட்டு போடுவதற்காக ஆயிரக்கணக்கில்திரண்டுள்ளார்கள்.
இங்கு தேர்தல் ஆணையம் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு வருகிறது. அதிமுகவினரை வெளியேற்றியவர்கள் திமுகவினரைமட்டும் விட்டுவிட்டனர். அதே போல அதிமுக கொடிகளை மட்டுமே அகற்றினார்கள்.
திமுகவினருக்கு முழு சாதகமாக தேர்தல் ஆணைய அதிகாரிகள் நடந்து கொள்கிறார்கள் என்றார்.
தேர்தல் ஆணைய அதிகாரி ராவ் சிறப்பாக செயல்படுவதாக பொன்னையன் கூற, ஒரு தலைப்பட்சமாக ஆணையம்செயல்படுவதாக அதிமுக வேட்பாளர் கூறுகிறார்.
ஏன் இந்த குழப்பம்?...