For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஏசியாட் அப்பு யானை மரணம்

By Staff
Google Oneindia Tamil News

திருச்சூர்:

டெல்லி ஆசிய போட்டியின் சின்னமாக இருந்த அப்பு என்று அழைக்கப்பட்ட யானை கேரளாவில் இறந்தது.

1982ம் ஆண்டு டெல்லியில் ஆசியப் போட்டிகள் நடைபெற்றது. இந்தப் போட்டியின் சின்னமாக அப்பு என்ற யானை தேர்வுசெய்யப்பட்டது. கேரளாவில் குருவாயூர் கோவிலுக்கு சொந்தமான இந்த யானைக்கு அப்போது 5 வயது தான் இருக்கும். ஆசியப்போட்டியின் போது அப்புவும் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டது.

கடந்த 21 வருடங்களுக்கு முன் ஒரு கோவில் விழாவுக்காக அழைத்து செல்லப்பட்ட போது அப்பு யானை தவறி விழுந்தது. அடிசறுக்கிய அப்புவுக்கு காலில் பலத்த அடிபட்டது. கடந்த 21 வருடங்களாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந் நிலையில் அப்பு இன்று இறந்தது. அப்பு இறந்த செய்தி கேள்விப்பட்டதும் அப்பகுதியை சேர்ந்த ஏராளமானோர் இறுதிஅஞ்சலி செலுத்தினர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X