வங்கி ஏஜெண்ட்டை கொலை செய்த அதிமுக புள்ளி
சேலம்:
சேலத்தில் வங்கி கடன் வசூல் செய்யும் ஏஜெண்ட் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டார். இதில் அதிமுக பிரமுகருக்குதொடர்பு இருப்பதாகத் தெரிகிறது.
சேலம் அஸ்தம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ராமமூர்த்தி (வயது 27). காதல் திருமணம் செய்த இவருக்கு சங்கீதா என்ற மனைவியும்,6 மாத கைக் குழந்தையும் உள்ளது.
இந் நிலையில் ராமமூர்த்தி நேற்று முன்தினம் இரவு வீட்டில் சென்னை செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால் நேற்று காலைஅவர் சேலம் சிவாயநகர் ரோட்டில் கழுத்து அறுபட்ட நிலையில் பிணமாக கிடந்தார்.
இது குறித்து அறிந்ததும் சம்பவ இடத்திற்கு போலீஸார் விரைந்து சென்று ராமமூர்த்தியின் உடலைக் கைப்பற்றி விசாரணைநடத்தினர்.
கொலையுண்ட ராமமூர்த்தி திடகாத்திரமான உடல் அமைப்பைக் கொண்டவர். எனவே அவரை ஒருவரால் கொலை செய்திருக்கமுடியாது என்று போலீஸார் கருதுகின்றனர். எனவே இந்தக் கொலையை குறைந்தபட்சம் 3 பேர் கொண்ட கும்பல் தான்செய்திருக்க முடியும் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
வங்கியில் கடன் வாங்கியவர்களிடம் கடனை திருப்பி வாங்குவதில் ராமமூர்த்தி மிகவும் கெடுபிடியாக நடந்து கொள்வார் என்றும்அதில் ஏற்பட்ட தகராறே இந்தக் கொலைக்கு காரணம் என்றும் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
அதிமுக பிரமுகருக்கு தொடர்பு?:
அந்த வகையில் சேலம் பேர்லாண்ட்ஸ் பகுதியிலுள்ள அதிமுக பிரமுகர் ஒருவரின் உறவினருக்கும், ராமமூர்த்திக்கும் சமீபத்தில்தகராறு ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அதிமுக பிரமுகர் ஒரு ரெளடி பட்டாளத்துடன் ராமமூர்த்தியின் வீட்டுக்கு வந்துமிரட்டி விட்டு சென்றுள்ளனர்.
எனவே அதிமுக பிரமுகர் தான் இந்தக் கொலைக்கு காரணமாக இருக்கலாம் என்று போலீஸார் கருதுகின்றனர். எனவேகொலையாளிகளை விரைவில் பிடித்து விடுவோம் என்று போலீஸார் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications