கொலைக்கு சென்று கொண்டிருந்த கூலி படை கைது
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னையில் தொழிலதிபர் ஒருவரைக் கொலை செய்வதற்காக ஆட்டோவில் பயங்கர ஆயுதங்களுடன் சென்ற கும்பலைபோலீஸார் வளைத்துப் பிடித்தனர்.
வியாசர்பாடி, மகாகவி பாரதி நகர் பகுதியில் போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆட்டோ ஒன்று படுவேகமாக வந்தது.
அப்போது, தொழில் போட்டி காரணமாக, கோயம்பேட்டைச் சேர்ந்த தொழிலதிபர் கணேஷ் என்பவரைக் கொலை செய்வதற்காகஅருண்குமார் என்பவர் தலைமையில் அந்தக் கும்பல் போய்க் கொண்டிருந்தது தெரியவந்தது.
உடனடியாக அந்த 5 பேரையும் போலீஸார் கைது செய்தனர். ஆட்டோவில் பதுக்கி வைத்திருந்த பட்டாக் கத்திகள் உள்ளிட்டபயங்கர ஆயுதங்களையும் போலீஸார் பறிமுதல் செய்தனர். ஆட்டோவும் பறிமுதல் செய்யப்பட்டது.












Click it and Unblock the Notifications