பாப்பாபட்டி: மதுரையில் நல்லண்ணு தலைமையில் உண்ணாவிரதம்

Subscribe to Oneindia Tamil

மதுரை:

பாப்பாபட்டி, கீரிப்பட்டி தலித் பஞ்சாயத்துக்களுக்குத் தேர்வு செய்யப்படும் தலைவர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்யும்நிலைக்கு பிற ஜாதியினரால் தள்ளப்படுவதைத் தடுக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிமதுரையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது.

பாப்பாபட்டி, கீரிப்பட்டி, நிாட்டாமங்கலம், கொட்டக்காச்சியேந்தல் ஆகிய தலித் பஞ்சாயத்துக்களுக்கு கடந்த பல வருடங்களாகபிரதிநிதிகள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இங்கு தலைவராக தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் உடனடியாக ராஜினாமா செய்துவிடுவதால் தொடர்ந்து தலைவர் பதவி காலியாகவே உள்ளது.

இந்த நிலையை தடுத்து, நான்கு தலித் பஞ்சாயத்துக்களுக்கும் உரிய பிரதிநிதித்துவம் ஏற்பட தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவின் தலைமையில் மதுரையில் இன்றுஉண்ணாவிரதப் போராட்டம் நடக்கிறது.

இதில் அக் கட்சியின் தேசிய செயலாளர் ராஜா, தமிழ் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்டதொண்டர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

பிற கட்சிகளின் உண்ணாவிரதம் போல் இல்லாமல், கம்யூனிஸ்ட் கட்சியினர் கடும் வெயிலில் காலை முதல் உண்மையிலேயேஉணவருந்தாமல் தங்களை வருத்திப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+