தமிழர் விடுதலைப் படை பிரமுகர் வெட்டிக் கொலை
Subscribe to Oneindia Tamil
கடலூர்:
தமிழர் விடுதலைப் படையைச் சேர்ந்த முக்கியப் பிரமுகரான அண்ணாதுரை என்பவர் கடலூரில் இன்று பட்டப் பகலில் 5 பேர் கும்பலால்வெட்டிக் கொல்லப்பட்டார்.
தடை செய்யப்பட்ட தமிழர் விடுதலைப் படையைச் சேர்ந்தவர் அண்ணாதுரை. இவர் கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியைச்சேர்ந்தவர்.சமீபத்தில் பக்கிரி என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் அண்ணாதுரை கைது செய்யப்பட்டார். பின்னர் நிபந்தனைஜாமீனில் அவர் விடுதலையானார்.
இதில் அண்ணாதுரை அந்த இடத்திலேயே பிணமானார். அவரை வெட்டித் தள்ளிய கும்பலில், பக்கிரியின் தம்பி சுரேஷ்குமார் என்பவரும்இருந்ததாக கூறப்படுகிறது.
கொலையாளிகளைப் பிடிக்க போலீஸார் தீவிர தேடுதல் வேட்டையை முடுக்கி விட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications