ஜெயலலிதாவே அனைத்து ஜாதியினருக்கும் தலைவி: எஸ்.எஸ்.சந்திரன்
காஞ்சிபுரம்:
தமிழகத்தில் உள்ள அத்தனை ஜாதியினருக்கும் ஜெயலலிதா நல்லது செய்துள்ளார். எனவே அனைத்து ஜாதியினருக்கும் அவரே ஒரேதலைவி என்று நடிகரும், அதிமுக எம்.பியுமான எஸ்.எஸ்.சந்திரன் கூறியுள்ளார்.
காஞ்சிபுரத்தில் அதிமுக சார்பில் நன்றி தெரிவிக்கும் கூட்டம் நடந்தது. இதில் எஸ்.எஸ்.சந்திரன் பேசுகையில், அண்ணாவின் இதயத்தில்இதயக்கனியாக இருந்தவர் எம்.ஜி.ஆர். அப்படிப்பட்ட அண்ணாவை, கொடியிலே அவரது உருவத்தை வைத்து நன்றி செலுத்தினார்எம்.ஜி.ஆர். அந்த எம்.ஜி.ஆரின். அதிமுகவுக்கு வாக்களித்து காஞ்சிபுரம் மக்கள் நன்றிக் கடன் செலுத்தியுள்ளனர்.
எனவே, தேர்தல் எப்போது வந்தாலும், எந்த நேரத்தில் வந்தாலும், எந்தச் சூழ்நிலையில் வந்தாலும் வெற்றி பெறப் போவது ஜெயலலிதாமட்டுமே. வெற்றி பெறவே பிறந்தவர் அவர். இன்னும் சில மாதங்களில் நாடாளுமன்றத்திற்கும் இடைத் தேர்தல் வரும். அதிலும்ஜெயலலிதாவுக்கே வெற்றி கிடைக்கும்.
தமிழகத்தில் உள்ள அத்தனை ஜாதியினருக்கும் ஜெயலலிதா நல்லது செய்துள்ளார். அனைவருக்கும் உதவிய ஒரே தலைவி அவர் தான்.வன்னியர்கள் 5 பேரை அமைச்சர்களாக்கி அழகு பார்த்துள்ளார்.
இதேபோல, யாதவர்கள், நாடார்கள், கவுண்டர்கள், செட்டியார்கள் என அத்தனை பேருக்கும் அவர் பலவகைகளில் உதவியுள்ளார் என்றார்எஸ்.எஸ்.சந்திரன்.












Click it and Unblock the Notifications