ஜெயலலிதாவே அனைத்து ஜாதியினருக்கும் தலைவி: எஸ்.எஸ்.சந்திரன்

Subscribe to Oneindia Tamil

காஞ்சிபுரம்:

தமிழகத்தில் உள்ள அத்தனை ஜாதியினருக்கும் ஜெயலலிதா நல்லது செய்துள்ளார். எனவே அனைத்து ஜாதியினருக்கும் அவரே ஒரேதலைவி என்று நடிகரும், அதிமுக எம்.பியுமான எஸ்.எஸ்.சந்திரன் கூறியுள்ளார்.

காஞ்சிபுரத்தில் அதிமுக சார்பில் நன்றி தெரிவிக்கும் கூட்டம் நடந்தது. இதில் எஸ்.எஸ்.சந்திரன் பேசுகையில், அண்ணாவின் இதயத்தில்இதயக்கனியாக இருந்தவர் எம்.ஜி.ஆர். அப்படிப்பட்ட அண்ணாவை, கொடியிலே அவரது உருவத்தை வைத்து நன்றி செலுத்தினார்எம்.ஜி.ஆர். அந்த எம்.ஜி.ஆரின். அதிமுகவுக்கு வாக்களித்து காஞ்சிபுரம் மக்கள் நன்றிக் கடன் செலுத்தியுள்ளனர்.

ஆளுங்கட்சியாக இருப்பதால் தான் அதிமுகவால் வெற்றி பெற முடிந்தது என்கிறார் கருணாநிதி. ஏன், இதே கருணாநிதி கடந்த 1989ம்ஆண்டு தமிழக முதல்வராக இருந்த போது மதுரை கிழக்கு, மருங்காபுரி ஆகிய இரு தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் நடந்தது. அதில்திமுக தானே வென்றிருக்க வேண்டும். ஆனால் அதிமுக தானே வென்றது? இதற்கு என்ன காரணம் சொல்லப் போகிறார் கருணாநிதி.

எனவே, தேர்தல் எப்போது வந்தாலும், எந்த நேரத்தில் வந்தாலும், எந்தச் சூழ்நிலையில் வந்தாலும் வெற்றி பெறப் போவது ஜெயலலிதாமட்டுமே. வெற்றி பெறவே பிறந்தவர் அவர். இன்னும் சில மாதங்களில் நாடாளுமன்றத்திற்கும் இடைத் தேர்தல் வரும். அதிலும்ஜெயலலிதாவுக்கே வெற்றி கிடைக்கும்.

தமிழகத்தில் உள்ள அத்தனை ஜாதியினருக்கும் ஜெயலலிதா நல்லது செய்துள்ளார். அனைவருக்கும் உதவிய ஒரே தலைவி அவர் தான்.வன்னியர்கள் 5 பேரை அமைச்சர்களாக்கி அழகு பார்த்துள்ளார்.

இதேபோல, யாதவர்கள், நாடார்கள், கவுண்டர்கள், செட்டியார்கள் என அத்தனை பேருக்கும் அவர் பலவகைகளில் உதவியுள்ளார் என்றார்எஸ்.எஸ்.சந்திரன்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+