For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இரட்டைக் கொலை: 7 பேருக்கு இரட்டை ஆயுள்தண்டனை

By Staff
Google Oneindia Tamil News

திருப்பூர்:

2 சாராய வியாபாரிகள் கொலை செய்யப்பட்ட வழக்கில் 7 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து திருப்பூர் நீதிமன்றம்தீர்ப்பளித்தது.

ஈரோடு நம்பியூர் மலையப்ப பாளையம் பகுதியைச் சேர்ந்தவர்கள் சிவராஜ், அதே பகுதியைச் சேர்ந்தவர் செல்வக்குமார். இருவரும்கள்ளச்சாராய வியாபாரிகள். திருப்பூரில் சாராயம் விற்று வந்தனர்.

இருவரும் ஈரோட்டிலிருந்து திருப்பூர் வந்து சாராயம் விற்பதை அறிந்த அந்தப் பகுதியைச் சேர்ந்த இந்து முன்னணியைச் சேர்ந்தஅர்ச்சுனன், குணசேகரன், மணிகண்டன், சம்பத்குமார், புருஷோத்தமன், மணி என்ற காட்டா மணி ஆகியோர் கள்ளச்சாராய வியாபாரிகள்இருவரிடமும் தொழிலை சிறப்பாக நடத்த வேண்டுமானால் தங்களுக்கு மாமூல் கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

ஆனால் சிவராஜும், செல்வக்குமாரும் அதற்கு உடன்பட மறுத்தனர். இதைத் தொடர்ந்து 7 பேரும் சேர்ந்து, 2 சாராய வியாபாரிகளையும்கொலை செய்தனர். இந்தக் கொலை தொடர்பாக சிவராஜின் மனைவி கொடுத்த புகாரின் பேரில் 7 பேரையும் போலீஸார் கைது செய்துதிருப்பூர் 4வது விரைவு நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி மாணிக்கம், 7 பேருக்கும் இரட்டை ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். மேலும் தலா ரூ. 28,000அபராதமும் விதிக்கப்பட்டது. இந்தத் தொகையிலிருந்து சிவராஜின் மனைவி சாந்திக்கு 75,000 ரூபாயும், செல்வக்குமாரின் தாயார்துளசியம்மாளுக்கு 45,000 ரூபாயும் இழப்பீடாக வழங்கப்பட வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X