சூடானில் தவித்த 29 தமிழர்கள் மீட்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சூடான் நாட்டில் வேலைக்காக சென்று பல்வேறு இன்னல்களை அனுபவித்து வந்த தமிழகத்தைச் சேர்ந்த 29 தொழிலாளர்களை சென்னைமாநகர காவல்துறை பத்திரமாக மீட்டுள்ளது.

சென்னையைச் சேர்ந்த அல் கரீப் வேலை வாய்ப்பு நிறுவனம் மூலம் தமிழகத்தைச் சேர்ந்த 29 பேர் சூடான் நாட்டில், எண்ணெய் சுத்திகரிப்புநிறுவனம் ஒன்றில், கட்டுமான வேலைக்காக சென்றனர். இதற்காக ஒவ்வொருவரும் ரூ. 45,000 வரை சென்னை நிறுவனத்திடம்கொடுத்துள்ளனர்.

சூடான் சென்ற அவர்களுக்கு பேசியபடி ஊதியமோ, தங்கும் வசதியோ, உணவோ தரப்படவில்லை. மலைப்பாம்புகள் உலாவும் இடத்தில்அவர்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.

ஆரோக்கியமில்லாத, தூய்மையற்ற, சாப்பிடவே முடியாத உணவு கொடுக்கப்பட்டது. சம்பளம் சரியாக தரப்படவில்லை. இதுகுறித்துகேட்டதற்கு 29 பேரும் சித்திரவதை செய்யப்பட்டனர்.

இதனால் 29 பேரும் மிகுந்த மன வேதனைப் பட்டனர். இவர்களில் ஒருவரான வெங்கட்ராமன் என்பவர் சென்னயில் தனது சகோதரரும்,வழக்கறிஞருமான வரதராஜனுக்கு இது குறித்துத் தகவல் கொடுத்தார். இதைத் தொடர்ந்து வரதராஜன், சென்னை மாநகர காவல்துறைஆணையர் நடராஜை சந்தித்து புகார் கொடுத்தார்.

புகாரின் பேரில் சென்னை போலீஸார் உடனடி நடவடிக்கையில் இறங்கினர். சூடான் நாட்டுத் தூதரகத்தைத் தொடர்பு கொண்டு 29பேரையும் பத்திரமாக மீட்க நடவடிக்கை எடுத்தனர். இந்த நடவடிக்கையின் பலனாக சூடானிலிருந்து 29 பேரும் சென்னைக்குக் கொண்டுவரப்பட்டனர்.

தங்களை பத்திரமாக மீட்ட சென்னை காவல்துறைக்கும், தமிழக அரசுக்கும் நன்றி தெரிவிப்பதாக மீண்டு வந்தவர்கள் கூறினர். இவர்களைசூடான் நாட்டிற்கு அனுப்பி வைத்த அல் கரீப் நிறுவனத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸார் தெரிவித்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+